உள்ளூர் செய்திகள்

கேபிள் திருட்டு

நரிக்குடி:நரிக்குடியில் சோலார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அதே ஊரைச் சேர்ந்த பாலமுருகன் 43 செக்யூரிட்டியாக பணியாற்றி வருகிறார். காலை சோலார் நிறுவனத்தை பாலமுருகன் ரோந்து சுற்றி வந்த போது, 500 மீட்டருக்கும் அதிகமான சோலார் கேபிள் வயர்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது. இதன் மதிப்பு ரூ. 50 ஆயிரம். நரிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !