விஜயகரிசல்குளம் அகழாய்வில் சுடுமண் குடுவை கண்டெடுப்பு
சிவகாசி: விருதுநகர் மாவட்டம், விஜயகரிசல்குளம் மூன்றாம் கட்ட அகழாய்வில் சுடுமண் விளையாட்டு குடுவை, மனித உருவத்தின் கால் பகுதி, அலங்கரிக்கப்பட்ட சங்கு வளையல்கள் கண்டெடுக்கப்பட்டன.இங்கு மூன்றாம் கட்ட அகழாய்வில், இதுவரையிலும் தோண்டப்பட்ட 18 குழிகளில் உடைந்த நிலையில் சுடுமண் உருவ பொம்மை, வட்டச்சில்லு, தங்க மணி, சூது பவள மணி உள்ளிட்ட 3,250 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தற்போது சிறிய அளவிலான சுடுமண் குடுவை, மனித உருவத்தின் கால் பகுதி, அலங்கரிக்கப்பட்ட சங்கு வளையல்கள் கண்டெடுக்கப்பட்டன.அகழாய்வு இயக்குனர் பாஸ்கர் பொன்னுசாமி கூறுகையில், “முன்னோர்கள் இப்பகுதியில் வசித்து தொழிற்கூடங்கள் நடத்தியதற்கான பல்வேறு சான்றுகள் கிடைத்து வருகின்றன. ''அதன்படி அதிகமான சங்கு வளையல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சிறுவர்கள் விளையாடுவதற்காக சிறிய அளவிலான விளையாட்டுப் பொருட்களும் உருவாக்கப்பட்டுள்ளன,” என்றார்.