உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விஜய கரிசல்குளம் அகழாய்வில் சங்கு வளையல்கள் கண்டெடுப்பு

விஜய கரிசல்குளம் அகழாய்வில் சங்கு வளையல்கள் கண்டெடுப்பு

சிவகாசி:விருதுநகர் மாவட்டம் விஜயகரிசல் குளம் மூன்றாம் கட்ட அகழாய்வில் சுடு மண்ணால் ஆன அலங்கரிக்கப்பட்ட மணிகள், சங்கு வளையல்கள் கண்டெடுக்கப்பட்டன.விஜய கரிசல்குளத்தில் மூன்றாம் கட்ட அகழாய்வில் இதுவரையிலும் தோண்டப்பட்ட 16 குழிகளில் உடைந்த நிலையில் சூடு மண் உருவ பொம்மை, சதுரங்க ஆட்டக் காய்கள், உள்ளிட்ட 2600 க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.தற்போது சுடுமண்ணால் ஆன அலங்கரிக்கப்பட்ட மணிகள், சங்கு வளையல்கள் கண்டெடுக்கப்பட்டன.அகழாய்வு இயக்குனர் பாஸ்கர் பொன்னுச்சாமி கூறுகையில் '' முன்னோர்கள் அணிகலன்களுக்கும், அழகிற்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். சுடுமண்ணால் ஆன மணிகள் அலங்கரிக்கப்பட்ட நிலையில் கிடைத்துள்ளது. தொழில்கள் நடந்ததற்கு சான்றாக பல்வேறு அலங்காரங்களில் சங்கு வளையல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை