உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சூட்கேஸ் மாயம்: தம்பதியர் சோகம்

சூட்கேஸ் மாயம்: தம்பதியர் சோகம்

நரிக்குடி:நரிக்குடி மினாக்குளத்தைச் சேர்ந்த போஸ் மகள் திலகவதி 38. மும்பையில் குடும்பத்தினருடன் வசிக்கிறார். கணவர் முருகன், குழந்தைகளுடன் மினாக்குளத்தில் உள்ள சகோதரர் வீட்டிற்கு விடுமுறைக்கு வந்தார். மும்பைக்கு செல்ல சூட்கேசில் 5 அரை பவுன் நகைகள், மற்ற பொருட்களையும் அதில் வைத்து எடுத்துச் சென்றார். ஊரில் இருந்து காரில் ரயில்வே ஸ்டேஷனுக்கு சென்றனர். சூட்கேஸை கார் டாப்பில் கயிறு கட்டி வைத்திருந்தனர். ரயில் நிலையம் சென்று பார்த்த போது சூட்கேஸ் இல்லை. சென்ற வழியில் தேடிப் பார்த்த போது கிடைக்கவில்லை . நகைகளுடன் பொருட்களும் காணாமல் போனதால் சோகமடைந்தனர். அ. முக்குளம் போலீசார் விசாரிக்கின்றனர் .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை