உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம்

சிவகாசி:சிவகாசி பஸ் ஸ்டாண்ட் அருகே இந்திய தொழிற்சங்க மையம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் நடந்தது. இந்திய தொழிற்சங்கம் மைய மாவட்ட செயலாளர் தேவா ,விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் விஜய முருகன் பேசினர். அனைத்து விவசாய விளை பொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை அரசு உறுதிப்படுத்த வேண்டுமென்பதுட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது. நிர்வாகிகள் பாலசுப்ரமணியன், குணசேகரன், பாப்பா உமாநாத், மகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் பங்கேற்ற 73 பேரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !