உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சிறுமிக்கு பாலியல் தொல்லை டிரைவருக்கு 20 ஆண்டு சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை டிரைவருக்கு 20 ஆண்டு சிறை

ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம் சாத்துாரில் 15 வயது சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ டிரைவர் சிவா 21, என்பவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.சாத்துார் தாலுகா மேலப்புதுாரைச் சேர்ந்தவர் சிவா. இவர் 2022 மார்ச் மாதம் 15 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சாத்துார் மகளிர் போலீசார் சிவாவை கைது செய்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது.இதில் சிவாவிற்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி பகவதி அம்மாள் தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை