தீ விபத்து
சிவகாசி: சிவகாசி அருகே அனுப்பன்குளம் மாரியம்மன் நகரை சேர்ந்தவர் சிவபெருமாள். இவருக்கு விஸ்வநத்தத்தில் பட்டாசுக்கு உரிய குழாய் தயாரிக்கும் கம்பெனி உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு 12:30 மணி அளவில் மின் கசிவால் தீப்பிடித்தது. இதில் குழாய்கள் எரிந்து நாசமானது. சிவகாசி தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.