வீட்டில் பட்டாசு வெடி விபத்து; ஒருவர் கைது
சாத்துார்: தாயில்பட்டி விஜயகரிசல்குளத்தில் பொன் பாண்டி 44. இவருக்கு சொந்தமான வீட்டில் பட்டாசு தயாரித்த போது ஜெகதீஷ், முத்துலட்சுமி, சண்முகத்தாய், உடல் கருகி பலியாகினர். மாரியம்மாள் காயமடைந்தார். பொன் பாண்டி தலைமறைவாக இருந்த நிலையில் நேற்று போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.