உள்ளூர் செய்திகள்

 இரங்கல் ஊர்வலம்

ராஜபாளையம்:இ.கம்யூ., மூத்த தலைவர் நல்லகண்ணு மறைவிற்கு ராஜபாளையத்தில் அனைத்து கட்சி சார்பில் இரங்கல் ஊர்வலம் நடந்தது. காந்தி சிலை ரவுண்டானா அருகே தொடங்கிய ஊர்வலத்திற்கு கட்சியின் மாநில குழு உறுப்பினர் ரவி தலைமை வகித்தார். தி.மு.க., எம்.எல்.ஏ., தங்கபாண்டியன், நகராட்சி தலைவர் பவித்ரா, மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் குருசாமி, ம.தி.மு.க., சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் விநாயகமூர்த்தி, மாவட்டச் செயலாளர் வேல்முருகன், காங்., நகர் தலைவர் சங்கர் கணேஷ், தே.மு.தி.க., ஒன்றிய செயலாளர் பொன்னுச்சாமி உள்ளிட்ட கட்சியினர் பங்கேற்றனர். ஊர்வலம் போலீஸ் ஸ்டேஷன் காந்தி கலை மன்றம் வழியே ஜவகர் மைதானம் அடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை