நுாலக இலக்கிய விழா
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் பென்னிங்டன் நூலகத்தின் 150 ஆம் ஆண்டு விழா கொண்டாட்டத்தின் மூன்றாம் நிகழ்வு இலக்கிய விழா நடந்தது.கமிட்டி துணைத் தலைவர் முத்துப்பட்டர் தலைமை வகித்தார். உறுப்பினர் கோவிந்தன் முன்னிலை வகித்தார். மூத்த உறுப்பினர் ஜெயக்குமார் வரவேற்றார். எழுத்தாளர் ரங்கையா முருகன் நூல்வழி பயணம் என்ற தலைப்பில் பேசினார். விழாவில் ஏராளமான எழுத்தாளர்கள் பங்கேற்றனர். செயலாளர் ராதா சங்கர் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை கமிட்டி உறுப்பினர்கள், பென்னிங்டன் பள்ளி ஆசிரியர்கள், நூலக பணியாளர்கள் செய்திருந்தனர்.