மேலும் செய்திகள்
விழிப்புணர்வு ஊர்வலம்
04-Apr-2026
விருதுநகர்: விருதுநகரில் மே தின விழாவையொட்டி சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., ஆகிய தொழிற் சங்கங்கள் சார்பில் ஊர்வலம் நடந்தது. விருதுநகர் ஸ்டேட் வங்கி முன் துவங்கிய ஊர்வலம் மெயின் பஜார், தெற்குரதவீதி, மேற்குரதவீதி வழியாக தேசபந்து மைதானத்தில் நிறைவடைந்தது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். ஊர்வலத்திற்கு சி.ஐ.டி.யு., மாவட்டக்குழு உறுப்பினர் விஜயபாண்டி, ஏ.ஐ.டி.யு.சி., தலைவர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் தலைமை வகித்தனர். ஊர்வலத்தை மார்க்சிஸ்ட் மாவட்டக்குழு உறுப்பினர் வேலுச்சாமி கொடியசைத்து துவக்கி வைத்தார். நிர்வாகிகள் அசோகன், பாண்டியன், சாராள், செல்லச்சாமி, ஏ.ஐ.டி.யு.சி., நிர்வாகிகள் காதர்மொய்தீன், பாண்டியன், சக்கணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
04-Apr-2026