ரயில்வே ஸ்டேஷனில் எம்.பி., ஆய்வு
விருதுநகர்: அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் விருதுநகர் ரயில்வே ஸ்டேஷனில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்த எம்.பி., மாணிக்கம் தாகூர் கூறுகையில், இதனால் ரயில்வே ஸ்டேஷனின் தோற்றமே மாற்றம் அடைந்துள்ளது. வரும் ஜூலைக்குள் முதற்கட்ட பணிகள் நிறைவடையும். பயணிகளுக்கான தங்குமிடம், எஸ்கலேட்டர் உள்ளிட்ட 2ம் கட்டப் பணிகள் குறித்து பின்னர் முடிவு செய்யப்படும்'', என்றார்.