உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கவர்னர் பதவி விலகவேண்டும் எம்.பி., மாணிக்கம் தாகூர் தாக்கு

கவர்னர் பதவி விலகவேண்டும் எம்.பி., மாணிக்கம் தாகூர் தாக்கு

விருதுநகர்: ''கவர்னர் ரவி பதவி விலக வேண்டும்'' என விருதுநகரில் ரூ.68 கோடியில் பாலம், நடைபாதை உள்ளிட்ட பணிகளுக்கான பூமி பூஜையில் பங்கேற்ற மாணிக்கம் தாகூர் எம்.பி., கூறினார்.விருதுநகரில் அவர் கூறியதாவது: தமிழகத்தில் இதுவரை பலர் கவர்னராக இருந்துள்ளனர். அப்போது வராத பிரச்னை தற்போது வருவதற்கு, கவர்னர் ரவி பா.ஜ.,வின் மாநிலத் தலைவர் போல் செயல்படுவது தான் காரணம்.மாநிலத்தில் நடப்பதை மத்திய அரசிடம் தகவல் தெரிவிக்கும் பணியை மட்டுமே கவர்னர் செய்ய வேண்டுமே தவிர நாட்டாமை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இதனால் தான் தபால்காரர்' என முதல்வர் ஸ்டாலின் விமர்சித்தார்.உச்சநீதிமன்றம் கவர்னர் ரவிக்கு சரியான அடி கொடுத்துள்ளது. மானம், ரோஷம் இருந்தால் அவர் பதவி விலக வேண்டும். அமைச்சர் பொன்முடி மீது முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுத்துவிட்டார். இல்லாத பிரச்னையை பேசுவதற்காக பா.ஜ., முயற்சி செய்கிறது. தமிழகத்தில் பா.ஜ., எக்காலத்திலும் மலராது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

veeramani
ஏப் 22, 2025 10:11

சிவகங்கை மாவட்டம் எரியூர் பகுதியை சேர்ந்தவர் அவருக்கு சம்பந்தமில்லாமல் விருதுநகர் பார்லிமென்ட் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரது சொந்த ஊரில் அவ்வளவு மரியாதை. கண்டனுர் சிதம்பரம் உயிருடன் உள்ளவரை மாணிக்கம் தகுர் சிவகங்கை மாவட்டத்துக்குள் நுழைய இயலாது இப்படி இருக்கையில் மேதகு ஆளுநர் அவர்களை பற்றி கருத்து சொல்கிறார் மானம், ரோஷம் இருந்தால் அவர் சிவகங்கை மாவட்டத்தில் வரும் தேர்தலில் போட்டியிட வேண்டும்.