உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / குடிநீர் தொட்டியில் மதுவுடன் புத்தாண்டு கொண்டாட்டம்

குடிநீர் தொட்டியில் மதுவுடன் புத்தாண்டு கொண்டாட்டம்

ராஜபாளையம்:விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சி 8வது வார்டு சம்பந்தபுரத்தில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தில் 6 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு மேல்நிலை குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டன. இந்த வளாகத்தில் இரு ஆண்டுகளாக திறந்தவெளி பார், கஞ்சா, சமூக விரோத செயல்கள் நடக்கின்றன. இதை கண்டிப்பவர்களுக்கு மிரட்டல் விடப்படுகிறது.இந்நிலையில் 4 நாட்களுக்கு முன் புத்தாண்டு கொண்டாட்டமாக இளைஞர்கள், சிறுவர்கள் தொட்டி மீது ஏறி மது அருந்துவது, தொட்டிக்குள் இறங்கி நிற்பது போன்ற வீடியோ வைரலானது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நகராட்சி கமிஷனர் நாகராஜன் கூறியதாவது: இது தொடர்பாக இளைஞர்கள் மீது போலீசில் செய்யப்பட்டது. தற்போது குடிநீர் தொட்டி சுத்தம் செய்யப்பட்டு விட்டது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை