உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஆம்னி பஸ் மோதி முதியவர் பலி

ஆம்னி பஸ் மோதி முதியவர் பலி

காரியாபட்டி, : காரியாபட்டி சந்திரங்குளத்தைச் சேர்ந்த ஜெயராமன் 74. கல்குறிச்சியில் தனியார் நிறுவனத்தில் வாட்ச்மேனாக வேலை பார்த்தார். நேற்று முன்தினம் காலை வேலைக்கு சைக்கிளில் சென்றார். மதுரை -தூத்துக்குடி நான்கு வழிச்சாலையை கடக்க முயன்ற போது தூத்துக்குடி சென்ற ஆம்னி பஸ் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். எட்டையாபுரம் எத்திலப்பநாயக்கன்பட்டி மூக்கையா பஸ்சை ஓட்டினார். மல்லாங்கிணர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்