உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஸ்ரீவி., கோயிலில் உண்டியல் திறப்பு

ஸ்ரீவி., கோயிலில் உண்டியல் திறப்பு

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணும் பணி நேற்று நடந்தது. அறநிலையத்துறை உதவி ஆணையர் நாகராஜ் தலைமை வகித்தார். செயல் அலுவலர் சக்கரை அம்மாள், கண்காணிப்பாளர் ஆவுடையம்மாள், ஆய்வாளர் முத்து மணிகண்டன் முன்னிலையில் 16 நிரந்தர உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டது. இதில் ரூ.14 லட்சத்து 18 ஆயிரத்து 930 ரொக்க பணம், 153 கிராம் தங்க பொருட்களும், 185 கிராம் வெள்ளி பொருட்களும், சில வெளிநாட்டு பணங்களும் காணிக்கையாக வரப்பட்டிருந்தது. காணிக்கைகள் எண்ணும் பணியில் கோயில் ஊழியர்கள், பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை