பெயின்டர் குத்திக்கொலை
விருதுநகர்:விருதுநகரில் முன்விரோதம் காரணமாக பெயின்டர் ஜெயசந்திரகுமார் 28, குத்திக்கொலை செய்யப்பட்டார். விருதுநகர் அருகே குல்லுார்சந்தை இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்தவர் ஜெயசந்திரகுமார் 28. இவர் நேற்று மாலை 6:45 மணிக்கு குல்லுார்சந்தை அணைப்பகுதியில் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார். இவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்ததுள்ளது. அதன் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் வச்சக்காரப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.