ஓய்வூதியர் குறைதீர் முகாம்
விருதுநகர்: விருதுநகர் முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கோட்ட அளவிலான ஓய்வூதியர் குறைதீர் முகாம் மார்ச் 24 மதியம் 12:00 மணிக்கு நடக்கிறது.ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் அது சம்பந்தமான குறைகள் இருப்பின் 'ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் முகாம், முதுநிலை அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளர், விருதுநகர் கோட்டம், விருதுநகர் - 626 001' என்ற முகவரிக்கு தபால் மூலமோ அல்லது dovirudhunagar.indiapost.gov.inஎன்ற மின்னஞ்சல் முகவரி வாயிலாகவோ மார்ச் 20க்குள் அனுப்ப வேண்டும். தபாலில் அனுப்புவோர் தபால் உறை முன்பக்க மேல் பகுதியில் 'ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் முகாம் - மார்ச் 2025' என குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.