மியாவாக்கி முறையில் மரக்கன்று நடல்
சிவகாசி; சிவகாசி பசுமை மன்றம், ஸ்ரீபதி பேப்பர் அண்ட் போர்ட் பிரைவேட் லிமிடெட் சார்பில் நமஸ்கரித்தான்பட்டி சுக்கிரவார்பட்டி இடையே 20.3 ஏக்கர் நிலத்தில் மியாவாக்கி முறையில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.ஸ்ரீநிதி முதலீட்டு குழுமம் தலைமை முதலீட்டு அதிகாரி வெங்கட்ராமசாமி துவக்கி வைத்தார். இரு கட்டங்களாக நடக்கும் இப்பணியில் தலா 75 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. பசுமை மன்ற நிர்வாகிகள் செல்வகுமார்,செந்தில்குமார், சுரேஷ் தர்கர், வெங்கடேஸ்வரன், வீரபத்திரன், சண்முக நடராஜன், ஜகவர், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.