/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சாத்தூரில் முதியவரை தாக்கி பணம்பறிப்பு:மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை வீச்சு
சாத்தூரில் முதியவரை தாக்கி பணம்பறிப்பு:மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை வீச்சு
சாத்தூர்: நடைபயிற்சியில் மேற்கொண்ட முதியவரைதாக்கி பணம் பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.சாத்தூர் எஸ்.ஆர்.நாயுடு நகரை சேர்ந்தவர் ரங்கராஜன் (82) இவர் அப்பகுதியில் நடைபயற்சிமேற்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் அவரைவழிமறித்து தாக்கி உள்ளனர் மேலும் அவரிடம் இருந்து ரூ.3,500 ரொக்க பணத்தையும் பறித்து சென்றனர். முதியவர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து அம்மாபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா உதவி கொண்டு மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.