மேலும் செய்திகள்
பட்டாசு ஆலை உரிமையாளர் உட்பட 5 பேர் கைது
14-Jan-2025
பட்டாசு திரி பதுக்கியவர் கைதுவிருதுநகர்: கவுண்டம்பட்டியைச் சேர்ந்தவர் குருமூர்த்தி 34. இவர் வெள்ளூர் பஸ் ஸ்டாப் அருகே பட்டாசு தயாரிக்கப் பயன்படும் 5 குரோஸ் மிஷின் திரிகளை பதுக்கி வைத்திருந்தார். இவரை ஆமத்துார் போலீசார் கைது செய்தனர்.பெண் தொழிலாளி கண் பார்வை இழப்புவத்திராயிருப்பு: கோட்டையூரை சேர்ந்தவர் காளீஸ்வரி 27, இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கூடை பின்னும் வேலை செய்து வந்தார். வேலை நிரந்தரம் காரணமாக அதிக கூடைகள் பின்னுமாறு நிர்வாகம் வற்புறுத்தியதால் அவசரமாக கூடை பின்னும் போது அவரது கைவிரல் கண்ணில் பட்டு காயம் ஏற்பட்டு கண்பார்வை இழந்துள்ளார். வத்திராயிருப்பு போலீசார் அந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் மற்றும் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.போலீஸ் மீது வழக்குதிருமங்கலம்: திருமங்கலம் காமராஜர்புரம் சுந்தரபாண்டி 34. விருதுநகர் ஆயுதப்படை போலீசாக உள்ளார். சில நாட்களுக்கு முன்பு உறவினர் ஒருவர் வீட்டுக்குச் சென்ற போது, சின்னப்பாண்டி என்பவரோடு தகராறு ஏற்பட்டு அடிதடியாக மாறியது. சின்னப்பாண்டியையும், அவரது மகள் பாண்டீஸ்வரியையும் தாக்கியதாக சுந்தரபாண்டி மீது திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.அசாம் மாநில வாலிபர் பலிசிவகாசி: அசாம் மாநிலம் ஜோராட் மாவட்டத்தை சேர்ந்தவர் அனீஸ் உராங்க் 20. இவர் 8 மாதமாக சிவகாசி அருகில் துரைச்சாமிபுரத்தில் உள்ள கிரசர் குவாரியில் வேலை பார்த்து வந்தார். இவர் குவாரியில் உள்ள கிடங்கில் குளித்த போது நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி இறந்தார். மாரனேரி போலீசார் விசாரிக்கின்றனர்.
14-Jan-2025