உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கார் மோதி போலீஸ்காரர் படுகாயம்

கார் மோதி போலீஸ்காரர் படுகாயம்

விருதுநகர்:விருதுநகர் மாவட்டம் ஆவியூர் அருகே ராயர்பட்டியைச் சேர்ந்தவர் கார்த்திக் ராஜா 34. இவர் மாவட்ட ஆயுதப்படையில் போலீசாக உள்ளார். நேற்று இரவு 7:30 மணிக்கு சூலக்கரை போலீஸ் கேண்டீனில் பொருட்களை வாங்கி விட்டு நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோட்டில் நடந்து சென்றார். பின்னால் வந்த கார் மோதியதில் கார்த்திக் ராஜா தலையில் பலத்த காயமடைந்தார். மேல்சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சூலக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை