கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
விருதுநகர் : விருதுநகர் ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் துாய்மை காவலர்களின் மாத ஊதியம் ரூ.10 ஆயிரமாக உயர்த்துதல், மக்கள் நலப்பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு காலமுறை ஊதியத்தை, காலமுறை ஊதியமாக நிர்ணயித்து பணி நிரந்தரம் செய்தல் உட்பட 16 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மக்கள் நலப்பணியாளர் சங்க மாவட்டத் தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு மாநில துணைத் தலைவர் ராமசுப்பு, மாவட்ட தலைவர் கண்ணன் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.