மாணவிகளுக்கு பொருட்கள் வழங்கல்
விருதுநகர்: விருதுநகர் தங்கம்மாள் பெரியசாமி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் எம்.பி., மாணிக்கம் தாகூர், எம்.எல்.ஏ., சீனிவாசன் முன்னிலையில் கலெக்டர் ஜெயசீலன் நடப்பு கல்வியாண்டிற்கான புதிய பாடநுால்கள், சீருடைகள், நோட்டு புத்தகங்கள், பிற கல்வி உபகரணப் பொருட்களை மாணவிகளுக்கு வழங்கினார். இதில் நகராட்சி தலைவர் மாதவன் உள்பட பலர் பங்கேற்றனர்.