விருதுநகரில் தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி
விருதுநகர், : விருதுநகரில் தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடந்தது.கால்நடை பராமரிப்புத்துறை, நகராட்சி நிர்வாகம் இணைந்து காலேஜ் ரோடு, நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. கால்நடைத்துறை டாக்டர்கள், நகராட்சி சுகாதார அலுவலர், மேற்பார்வையாளர்கள், துப்புரவு பணியாளர்கள் பிடித்தனர். தடுப்பூசி செலுத்திய நாய்களின் மேல் சிவப்பு மை அடையாளமிடப்பட்டது.