உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மாநில கால்பந்து போட்டிக்கு ரமணாஸ் மாணவிகள் தேர்வு

மாநில கால்பந்து போட்டிக்கு ரமணாஸ் மாணவிகள் தேர்வு

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை ரமணாஸ் கல்லூரி மாணவிகள் மாநில கால்பந்து போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.மாவட்ட அளவில் நடந்த முதல்வர் கோப்பை கால்பந்து போட்டியில் ரமணாஸ் கல்லூரி மாணவிகள் கார்த்திகா, வர்ஷினி, பூர்ணிமா, ஜெயஸ்ரீ, பிரியதர்ஷினி, லக்க்ஷனா கலந்து கொண்டு 3 ம் இடத்தை பிடித்தனர். மேலும் மாநில அளவில் நடைபெற உள்ள முதல்வர் கால் பந்து போட்டிக்கு தகுதி பெற்றனர்.வெற்றி பெற்ற மாணவிகளை கல்லூரி செயலர் இளங்கோவன், சேர்மன் ராமச்சந்திரன், பி.எட்., கல்லூரி செயலர் சங்கரநாராயணன், போக்குவரத்து செயலர் விக்னேஷ், முதல்வர் தில்லை நடராஜன், துணை முதல்வர் பவர்ணா பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை