உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சிறுமிக்கு தொல்லை உறவினருக்கு சிறை

சிறுமிக்கு தொல்லை உறவினருக்கு சிறை

ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம் சாத்துாரை சேர்ந்தவர் செல்வம் 49.கூலித் தொழிலாளியான இவர் 2024 மார்ச் 23ல் தனது உறவினரின் 9 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சாத்துார் மகளிர் போலீசார் செல்வத்தை கைது செய்தனர்.ஸ்ரீவில்லிபுத்துார் போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. செல்வத்திற்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி சுதாகர் தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் முத்துமாரி ஆஜரானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !