குளத்தில் மூழ்கி பலியானோர் குடும்பத்தினருக்கு நிவாரணம்
திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராகவர் கோவில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த திருத்தங்கலை சேர்ந்த வீரராகவன் 25, உட்பட மூவரின் குடும்பத்தினருக்கு முதல்வர் நிவாரண நிதி வழங்கப்பட்டது. குன்றத்துாரை சேர்ந்தவர் ஹரிஹரன், 17. அவருடன், அம்பத்துாரை சேர்ந்த வெங்கட்ராமன், 19, விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலைச் சேர்ந்த வீரராகவன், ஆகியோர், சென்னை சேலையூரில் ஒரு வேத பாடசாலையில் வேதபாராயணம் பயின்று வந்தனர்.அவர்கள், திருவள்ளூர்வீரராகவ பெருமாள் கோவிலில் நடைபெறும் சித்திரை பிரம்மோற்ஸவ விழாவில் வேதபாராயணம் செய்ய வந்திருந்தனர். நேற்று முன்தினம், கோவில் குளத்தில் சந்தியாவதனம் செய்த போது, மூவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். நீரில் மூழ்கி உயிரிழந்தோரின் பெற்றோர், சுதர்சனம், மணிவண்ணன் மற்றும் ரவி ஆகியோரிடம், திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், முதல்வர் பொது நிவாரண நிதிக்கான காசோலையை, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நாசர் வழங்கினார்.