கவுசிகா நதியில் ஆய்வு
விருதுநகர் : விருதுநகர் கவுசிகா நதி பகுதிகளில் கலெக்டர் ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். நதியில் கழிவுநீர் கலத்தல், குப்பை கொட்டுதலை தடுப்பது குறித்தும், நதியினை மாசடையாமல் பாதுகாப்பதற்கு செய்ய வேண்டிய பணிகள், நடவடிக்கைகள் குறித்தும் அரசு அலுவலர்களுக்கு அறிவுரை, ஆலோசனைகளை வழங்கினார். நகராட்சி தலைவர் மாதவன், கமிஷனர் சுகந்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.