சிதறிய அரிசி மூடைகள்
அருப்புக்கோட்டை : சேலத்தில் இருந்து 1400 அரிசி மூடைகளை ஏற்றிக்கொண்டு வந்த லாரி தூத்துக்குடிக்கு சென்று கொண்டிருந்தது. அருப்புக்கோட்டை அருகே ராமானுஜபுரம் நான்கு வழி சாலையில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த லாரி ரோடு ஓரத்தில் கவிழ்ந்தது. இதில் அரிசி மூடைகள் சாலை ஓரம் சிதறின. யாருக்கும் காயமில்லை. போலீசார் விசாரிக்கின்றனர்.