புள்ளிமான்கள் மீட்பு
சாத்துார்: வெம்பக்கோட்டை அருகே கணஞ்சாம்பட்டியில் நேற்று காலையில் 2 புள்ளி மான்கள் உணவு தேடி ஊருக்குள் வந்தன. தெரு நாய்கள் மான்களை விரட்டியதை தொடர்ந்து அவை அப்பகுதியில் உள்ள தனியார் தோட்டம் கிணற்றில் தவறி விழுந்தது. மக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் 2 மான்களையும் உயிருடன் மீட்டு காட்டுப்பகுதியில் விட்டனர்.