உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ரோசல்பட்டியில் ஒரு மாதமாகஇல்லை குடிநீர் வினியோகம்

ரோசல்பட்டியில் ஒரு மாதமாகஇல்லை குடிநீர் வினியோகம்

விருதுநகர்: விருதுநகர் ரோசல்பட்டி ஊராட்சியில் ஒரு மாதமாக குடிநீர் வினியோகம் இல்லை. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.விருதுநகர் ரோசல்பட்டி ஊராட்சியில் பாண்டியன் நகர், முத்தால் நகர், கே.கே.எஸ்.எஸ்.என்., நகர், அண்ணா நகர், குமராபுரம், நிம்மலபட்டி ஆகிய பகுதிகள் உள்ளன. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்போர் உள்ளனர். இங்கு தாமிரபரணி, ராஜிவ் காந்தி திட்டங்களில் இருந்து குடிநீர் வழங்கப்படுகிறது. ஏப்ரல் இறுதியில் இருந்து தற்போது வரை குடிநீர் வினியோகம் ஆகவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.முழுக்க முழுக்க மினி டேங்கர் லாரிகளின் குடிநீரை நம்பியிருக்க வேண்டியுள்ளது. புழக்கத்திற்கு தொட்டி வைத்து அவை செயல்படும் இடங்களில் பிரச்னை இல்லை. தொட்டி இல்லாத இடங்களில் உள்ள மக்கள் புழக்க நீருக்கு கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே ஒன்றிய நிர்வாகம் இப்பகுதியில் விரைந்து குடிநீர் கிடைக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ