கஞ்சா பறிமுதல் மூவர் கைது
சிவகாசி : திருத்தங்கல் அண்ணா காலனியை சேர்ந்த பாண்டி 27, பாண்டியன் நகரை சேர்ந்த நாகசரவணன் 19, வடக்கு ரத வீதியை சேர்ந்த விக்னேஷ் குமார் 23, ஆகியோர் திருத்தங்கல் அரசு பள்ளி அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தனர். திருத்தங்கல் போலீசார் கஞ்சா, இரு டூவீலர்களை பறிமுதல் செய்து மூன்று பேரையும் கைது செய்தனர்.