மேலும் செய்திகள்
கணினி அறிவியல் துறை கருத்தரங்கு
04-Feb-2026
சிவகாசி: சிவகாசி எஸ்.எப்.ஆர்.,மகளிர் கல்லுாரி கணினி அறிவியல் சுயநிதி துறை சார்பில் ஒரு நாள் பயிற்சி பட்டறை இன்டர்நெட் ஆப் திங்க்ஸ் என்ற தலைப்பில் நடந்தது. மாணவிகள் மிருதுளா, பாண்டீஸ்வரி தொகுத்து வழங்கினர். மாணவி ரித்திகா பிரார்த்தனை பாடல் பாடி துவக்கி வைத்தார். மாணவி தேவி வரவேற்றார். துறை தலைவர் பிரசில்லா தலைமை வகித்தார். விருதுநகர் ஹிந்து நாடார் செந்திக்குமார நாடார் கல்லுாரி உதவி பேராசிரியர் கணேஷ் பேசினார். 81 இளங்கலை மூன்றாம் ஆண்டு கணினி அறிவியல் மாணவிகள் பங்கேற்றனர். மாணவி வனிதா நன்றி கூறினார்.
04-Feb-2026