மேலும் செய்திகள்
டூ - வீலர் மோதி எரிந்த பஸ்; உயிர் தப்பிய பயணியர்
03-Jul-2025
ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் அருகே டூவீலர் மீது பஸ் மோதியதில் கிருஷ்ணன் கோவில் தனியார் பல்கலையில் படித்த ஆந்திராவைச் சேர்ந்த மாணவர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். ஆந்திர மாநிலம் அனந்தப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் வலசமூர்த்தி ஹாரிரோஹித் 19, தொர்கிலு கார்த்திக் 20 . இருவரும் கிருஷ்ணன் கோவில் தனியார் பல்கலையில் பி.டெக். மூன்றாம் ஆண்டு படித்தனர். நேற்று மாலை 6:15 மணிக்கு பல்கலையில் இருந்து ஸ்ரீவில்லிபுத்துாருக்கு டூவீலரில் தனியார் கல்லுாரி அருகே சென்று கொண்டிருந்த னர். அப்போது எதிரே மதுரைக்கு சென்ற தனியார் பஸ் டூவீலர் மீது மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர். டூவீலர் நொறுங்கியது. தென்காசி மாவட்டம் கரிவலம் வந்த நல்லுாரைச் சேர்ந்த தனியார் பஸ் டிரைவர் முனீஸ் குமாரிடம்39, கிருஷ்ணன்கோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.
03-Jul-2025