உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வ.உ.சி., சிலை திறப்பு

வ.உ.சி., சிலை திறப்பு

ராஜபாளையம் : ராஜபாளையம் வ.உ.சி. கலையரங்கத்தில் வீரக்கொடி வெள்ளாளர் உறவின் முறை சார்பில் வ.உ.சிதம்பரம் பிள்ளை வெண்கல சிலை திறப்பு விழா நடந்தது. வருவாய் துறை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். வ.உ.சி. சிலையை திறந்து வைத்து புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி சண்முகம் பேசியதாவது: சென்னையில் வ.உ.சி 5 ஆண்டுகள் வாழ்ந்த வீடு பராமரிப்பு இன்றி பாழடைந்து கிடக்கிறது. அந்த வீட்டை சீரமைத்து நினைவு மண்டபமாக்க முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும். துாத்துக்குடி விமான நிலையத்துக்கு வ.உ.சி பெயர் வைக்க வேண்டும். லோக்சபாவில் சிலை வைக்க வேண்டும். பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். புதிய நீதி கட்சி தென் மண்டல செயலாளர் வெங்கடாசலம் பிள்ளை, வீரக்கொடி வெள்ளாளர் உறவின்முறை தலைவர் மணிகண்டன் பிள்ளை உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

veeramani
செப் 08, 2025 09:11

வ உ சி ....இந்திய சுதந்திர போராடத்தில் மென்மையானவர் காரைக்குடியில் இவரது பெயரில் முக்கிய சாலை உள்ளது இதே ஓலா அனைத்து மாவட்ட தலைநகர்களிலும் ஒரு சாலைக்கு இவரது பெயரை வைக்க வேண்டும்


புதிய வீடியோ