தென் மண்டல ஐ.ஜி.,யாக ராஜேஷ் தாஸ்
சென்னை:சென்னை புறநகர் மற்றும் சென்னை கமிஷனரகங்கள் ஒன்றிணைக்கப்பட்டு, கிரேட்டர் சென்னை போலீஸ் கமிஷனரகம் உருவாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, புறநகர் கமிஷனராக இருந்த ராஜேஷ் தாஸ், கிரேட்டர் சென்னை கமிஷனரகத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கூடுதல் கமிஷனர்(குற்றம்) பதவியில் நியமிக்கப்படுவார் என கூறப்பட்டது.இந்நிலையில், நேற்று அரசு உள்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புறநகர் கமிஷனராக இருந்த ராஜேஷ் தாஸ், மதுரை தென் மண்டல ஐ.ஜி.,யாக நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.