உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருச்சி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: மனித நேய மக்கள் கட்சி

திருச்சி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: மனித நேய மக்கள் கட்சி

சென்னை :திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா அறிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:திருச்சி மேற்கு சட்டசபை தொகுதிக்கு நடைபெறும் இடைத்தேர்தலில், அங்கு போட்டியிடும் எந்த வேட்பாளருக்கும் ஆதரவு அளிக்கவில்லை. சில ஊடகங்களில், ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சி வேட்பாளருக்கு, மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு தெரிவித்ததாக வெளியாகியுள்ள செய்தி தவறானது. அந்த தொகுதி வாக்காளர்கள், மனசாட்சியின்படி ஓட்டளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ