உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 1 கோடி வீடுகளுக்கு மின்கட்டண உயர்வு இல்லை; சப்பை கட்டு கட்டும் தமிழக மின்வாரியம்

1 கோடி வீடுகளுக்கு மின்கட்டண உயர்வு இல்லை; சப்பை கட்டு கட்டும் தமிழக மின்வாரியம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : 'அ.தி.மு.க., ஆட்சியில் ஏற்பட்ட அதிக இழப்பால், வட்டி செலவு அதிகரித்தது உள்ளிட்ட காரணங்களால், மின் கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது' என, மின் வாரியம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் இம்மாதம், 1ம் தேதி முதல் மின் கட்டணத்தை, 4.83 சதவீதம் உயர்த்தி, ஒழுங்குமுறை ஆணையம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இதற்கான காரணம் குறித்து, மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:கடந்த, 2011 - 12ல், 18,957 கோடி ரூபாயாக இருந்த மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் ஒட்டுமொத்த இழப்பு, 10 ஆண்டுகளில், 96,712 கோடி ரூபாய் அதிகரித்து, 2021 மார்ச்சில், 1.13 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்தது. நிதியிழப்பை, 2021 - 22ல் இருந்து, 100 சதவீதம் முழுதும் அரசே ஏற்கும் என்ற தற்போதைய தமிழக அரசின் நிலைப்பாட்டை போல், முந்தைய காலத்தில் எவ்வித உறுதியும் வழங்கப்படவில்லை.இதனால் மின் பகிர்மான கழகம், நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளிடம் இருந்து கடன் வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. இதன் விளைவாக, 2011 - 12ல் பகிர்மான கழகம், மின் தொடரமைப்பு கழகத்திற்கு, 43,493 கோடி ரூபாயாக இருந்த கடன், பத்து ஆண்டுகளில் மூன்று மடங்கு அதிகரித்து, 2021 - 22 வரை, 1.60 லட்சம் கோடி ரூபாயாக மாறியது. இதனால், 2011 - 12ல் ஆண்டுக்கு, 4,588 கோடி ரூபாயாக இருந்த கடன்களின் மீதான வட்டி, 259 சதவீதம் உயர்ந்து, 2020 - 21ல், 16,511 கோடி ரூபாயாக அதிகரித்தது. இவ்வாறு அதிகரித்து வரும் நிதியிழப்பை ஈடுசெய்ய, மின் கட்டணம் உயர்த்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அதிக கட்டண உயர்வால், நுகர்வோருக்கு ஏற்படக்கூடிய சுமையை கருதி, அரசு நுகர்வோருக்கு பெரும் பாதிப்பு ஏற்படாதபடி, ஆண்டுதோறும் சிறிய அளவில் கட்டண உயர்வை அமல்படுத்தி வருகிறது. மத்திய மின் அமைச்சக வழிகாட்டுதலின்படி, மறுசீரமைக்கப்பட்ட மின் வினியோக திட்டத்தின் கீழ், மத்திய அரசின் நிதியை பெற, ஆண்டுதோறும் மின் கட்டணம் திருத்தம் செய்வது, முதல் நிபந்தனை.இந்த வகையில், 2022 - 23ல் மின்கட்டண உயர்வு, ஏழு மாதங்களுக்கு மட்டும் உயர்த்தப்பட்டது. 2023 ஜூலை முதல், 2.18 சதவீதம் உயர்த்தப்பட்டது. வீடுகளுக்கான உயர்வு முழுதும், அரசே ஏற்றது. இம்மாதம் முதல், 4.83 சதவீதம் மின்கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது.தமிழகத்தில் உள்ள, 2.47 கோடி வீடுகள் மற்றும் குடிசை வீட்டு நுகர்வோர்களில், 1 கோடி பேருக்கு, கட்டண உயர்வு இல்லை இரு மாதங்களுக்கு மொத்தம், 200 யூனிட் வரை பயன்படுத்தும், 63 லட்சம் வீடுகளுக்கு மாதம் அதிகபட்சமாக, 5 ரூபாய் மட்டுமே உயரும். 300 யூனிட் வரை பயன்படுத்தும், 35 லட்சம் வீடுகளுக்கு மாதம், 15 ரூபாய் வரை மட்டுமே உயரும் இரு மாதங்களுக்கு, 400 யூனிட் வரை பயன்படுத்தும், 25 லட்சம் வீடுகளுக்கு மாதம் அதிகபட்சம், 25 ரூபாயும்; 500 யூனிட் வரை பயன்படுத்தும், 13 லட்சம் வீடுகளுக்கு மாதம், 40 ரூபாய் உயரும் 2.19 லட்சம் சிறு, குறுதொழில்களுக்கு யூனிட்டிற்கு, 20 காசு உயரும்விசைத்தறி நுகர்வோருக்கு, 1,000 யூனிட் வரை இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். 1,001 யூனிட் முதல், 1,500 யூனிட் வரை யூனிட் ஒன்றுக்கு, 20 காசும், அதற்கு மேல் உள்ள யூனிட்களுக்கு, 25 காசுகள் உயரும்.தாழ்வழுத்த தொழிற்சாலைகளுக்கு யூனிட்டிற்கு, 35 காசும்; 22.36 லட்சம் சிறு வணிக நுகர்வோருக்கு மாதம், 15 ரூபாய் உயரும் உயரழுத்த தொழிற்சாலைக்கு யூனிட்டிற்கு, 36 காசு உயரும்நிலைக் கட்டணம் கிலோ வாட் ஒன்றுக்கு மாதம், 3 ரூபாய் முதல், 27 ரூபாய் வரை உயரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

அப்பாவி
ஜூலை 17, 2024 09:53

தொழிற்சாலைகளுக்கு கட்டணம் உயர்ந்தால் விலை எறவே ஏறாது கோவாலு. உருப்படாத அரசின் நிர்வாக லட்சணம் இதுதான்.


N DHANDAPANI
ஜூலை 17, 2024 08:22

தினமலர் இன்று அட்டவணைப்படுத்தி தெரிவித்துள்ள மாநில வாரியான மின் கட்டண விகிதத்தை பார்க்கும் பொழுது, இப்போதுள்ள கட்டண உயர்வு என்பது நியாயமானது தான். ஆனால் முத்தரசன் இங்கு தெரிவித்துள்ளது போல மத்திய அரசாங்கம் இதற்கு காரணம் எனக் கூறுவது தவறு. இதர மாநிலங்களில் உள்ளது போலவே நமது மாநிலத்திலும் மின் கட்டண உயர்வு அதிக வித்தியாசம் இல்லாமல் கட்டமைக்கப்பட வேண்டும். அதற்கு நாம் ஆதரவு கோரத்தான் வேண்டும். ஆனால் அதே நேரத்தில் மின்சாரத் துறையின் நிர்வாகச் செலவுகள் கணினி மயமாக்கப்பட்ட பின்னரும் இன்னமும் குறைக்கப்படாமல் உள்ளது. உதாரணத்திற்கு ஒவ்வொரு துணை செயற்பொறியாளர் செயற்பொறியாளர் நிர்வாகப் பொறியாளர் அலுவலகங்களில் கணினி மயமாக்கல் என்பது மிகக் குறைந்த அளவிலும், காகித பயன்பாடு மிக அதிகமாக இருந்து வருவதும் அதன் மூலமாக கால விரயங்கள், பொருள் விரயங்கள் ஆகிக் கொண்டிருப்பதும், வாகனங்களுக்கென மிகப் பெரிய தொகைகள் செலவு செய்வதும் கட்டுப்படுத்த வேண்டிய செயல்பாடுகள் .......இதன் மூலமாக நிர்வாகச் செலவுகளை பெருமளவில் குறைக்க முடியும் என்பதையும் கருத்தில் கொண்டு எதிர்கால திட்டமிடலை மாற்றி அமைக்க வேண்டும்.


Varadarajan Nagarajan
ஜூலை 17, 2024 08:18

சமீபத்திய மின் கட்டண உயர்வை மின் வாரியம் கேட்கவில்லை. அதற்க்கு பதிலாக மின் நுகர்வோருக்கும் மின் வாரியத்திற்கும் நடு நிலையாக செயல்படவேண்டிய ஆணையம் தன்னிச்சையாக இந்த கட்டண உயர்வை அறிவித்துள்ளது. அதுவும் தேர்தல் இடைத்தேர்தல்கள் முடிந்தபிறகு. மின் வாரியம் ஆண்டுதோறும் ஆணையத்திடம் வரவு செலவு கணக்கை சமர்ப்பிக்கவேண்டும். அதை பரிசீலித்து, மக்களிடம் கருத்துக்கேட்டு அதன் பிறகுதான் மின் கட்டண உயர்வை அறிவிக்கவேண்டும். அதற்க்கு பதிலாக சட்டத்தில் உள்ள ஓட்டையை பயன்படுத்தி ஆணையம் மின் வாரியத்தின் ஒரு அங்கம்போல் செயல்பட்டு மின் கட்டண உயர்வை அறிவிக்கின்றது. ஆனால் சரியாக செயல்படாத அல்லது முறைகேடுகள் நடந்தால் மின்வாரியத்தின்மீது இந்த ஆணையம் இதுபோன்ற தன்னிச்சை நடவடிக்கைகளை எடுப்பதில்லை. அப்படியென்றால் செலவுகள் அதிகரிக்க மின் வாரியத்தில் எந்த முறைகேடுகளும் நடக்கவில்லை என ஆணையம் சான்றளிப்பது போலுள்ளது. அண்டை மாநிலத்தில் கொள்முதல் செய்யப்பட்ட மின் மாற்றிகள் விலையைவிட அதிகமாக கொடுத்து நமது மின்வாரியம் கொள்முதல்செய்ததை இந்த வாரியம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?


Rajarajan
ஜூலை 17, 2024 07:55

பதினோரு பேரை கொண்ட பொருளாதார சிறப்பு குழுவை ஏறுபடுத்தினீங்களே?? அவங்க கொடுத்த யுக்தியா இது?? இதுக்கு எதுக்கு குழு? அதுசரி, நாங்க சொல்லவா? ஸ்மார்ட் மீட்டர் எல்லாருக்கும் பொறுத்துங்க. அதை பராமரிக்க, தனியார் குழுக்கிட்ட கொடுங்க. அதீத சம்பளம், மற்றும் ஆட்குறைப்பை ஏறுபடுத்துங்க. முடிந்த அளவு, திறமையான தனியாரிடம், நிர்வாகத்தை பிரிச்சி பிரிச்சி கொடுங்க. முடிஞ்சது சிக்கல்.


Padmanabam, Mylapore
ஜூலை 17, 2024 06:59

Kasimani Baskaran (Singapore Guy) and Ramesh Sargam (Bengaluru Guy) you both are putting in all efforts to grow BJP in TN even though you reside out of state. Why don't you both relocate to TN state and join BJP and do field work to get them into power. Seems you both have been seriously affected by DMK. Though you both are out of this state, you both ensure to visit this news page and keep commenting on all articles and show all your love to BJP madly. Great. ?


அண்ணாமலை ஜெயராமன்
ஜூலை 17, 2024 07:19

தமிழ்நாட்டில் இருந்து கொண்டு திமுகவை விமர்சித்தால் உடனே கைது தான். சர்வாதிகார ஆட்சியை எதிர்க்க வெளியில் இருந்து ஆதரவு


shyamnats
ஜூலை 17, 2024 08:47

தனி மனித விமரிசனம் அவசியமா? அவர்கள் சொல்லும் கருத்துக்கள் சரியா தவறா என்று மட்டுமே பார்க்கவும். தமிழகத்தில் 95 சதவிகிதம் கட்சிகள் சிறுபான்மையினர் என்று சொல்லப்படும் மதங்களை சார்ந்து ஆதரவு தெரிவித்து விட்டு, ஹிந்துக்களுக்கு எதிராக செயல்படும் பொது, பா ஜ காவை மட்டும் மதம் சார்ந்த கட்சி என்று அறிவித்து அரசியல் செய்வது மட்டும் சரியா? அனைவருக்குமான அரசியல் செய்யும் கட்சிகளை எங்கே பார்க்க முடிகிறது.


Kasimani Baskaran
ஜூலை 17, 2024 05:39

என்னது.. வட்டி கட்டமுடியாமல் தமிழக அரசு இருக்கிறதா... உலகிலேயே சிறந்த நிதிநிர்வாகம் உள்ள மாநிலம் தமிழகம் என்று டக்ளஸ் உருட்டியதே... அது பொய்யா கோபால்?


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை