உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டாக்டர் படிப்பை கைவிட்டால் ரூ.10 லட்சம் அபராதம்! மருத்துவக்கல்வி இயக்குநரகம் கிடுக்கிப்பிடி

டாக்டர் படிப்பை கைவிட்டால் ரூ.10 லட்சம் அபராதம்! மருத்துவக்கல்வி இயக்குநரகம் கிடுக்கிப்பிடி

சென்னை: மருத்துவ படிப்பை கைவிட்டால் ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று மருத்துவக்கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.

கவுன்சிலிங்

எம்.பி.பி.எஸ்., படிப்புகளுக்கான முதல்சுற்று கவுன்சிலிங் முடிந்த போது 1423 காலி இடங்களும், பி.டி.எஸ்., படிப்பில் 1566 இடங்களும் காலியாக இருந்தது. அதன் பின்னர் 2ம் கட்ட கவுன்சிலிங் அறிவிக்கப்பட்டு கடந்த 14ம் தேதி தொடங்கியது. மாணவர்கள் விரும்பிய கல்லூரிகளை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு நேற்றுடன் முடிவடைய, தரவரிசைப்பட்டியல் நாளை வெளியிடப்படுகிறது.

காலக்கெடு

இதைத்தொடர்ந்து, மாணவர்கள் வரும் 26ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் சென்று சேர்ந்து கொள்ள வேண்டும். விருப்பம் இல்லாதவர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கல்லூரியில் இருந்து அபராதம் இன்றி வெளியேறிவிடலாம்.

ரூ.10 லட்சம் அபராதம்

ஆனால் கால இடைவெளி முடிந்த பின்னர், படிப்பை பாதியில் கைவிட்டால் ரூ.10 லட்சம் அபராதம், வைப்புத் தொகை, கல்விக்கட்டணம் ஆகியவை செலுத்த வேண்டும் என்று மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகள் கூறி உள்ளனர்.

நடவடிக்கை

இது குறித்து அவர்கள் மேலும் கூறி உள்ளதாவது; மாணவர்கள் இடங்களை தேர்ந்தெடுக்கும் போது மிகவும் தெளிவாகவும், கவனமாகவும் செயல்பட வேண்டும். மாணவர்கள் படிப்பை கைவிட்டால் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். கவுன்சிலிங் முடிந்த பின்னர், கல்லூரிகளில் ஏற்படும் காலி இடங்களை குறைக்க இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது.இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

ஆரூர் ரங்
செப் 18, 2024 12:50

தொழில்நுட்பமும் அறிவியலும் முன்னேறிவிட்ட இக்காலத்தில் அரசு உயர்பதவி, அரசியலில் PROFESIONAL படிப்பு படித்த பலர் சேர வேண்டும். காலத்தின் கட்டாயம். ஆனால் மக்கள் அவர்களை ஆதரித்து வாக்களிப்பது குறைவு என்பதாலோ என்னவோ டுமீல் அமைச்சரவையில் பாதி பேர் பள்ளிப்படிப்பையே முடிக்காதவர்கள். ஏனெனில் இது மிகவும் முன்னேறிய முதன்மை மாநிலம்.


ஆரூர் ரங்
செப் 18, 2024 09:28

வீராணம் நீர், கூவம் மணக்க வைக்கும் திட்டங்களை பாதியில் கைவிட்ட கட்சிக்கு என்ன அபராதம்?


பாமரன்
செப் 18, 2024 09:00

அதேபோல் அரசு இவ்ளோ செலவு பண்ணுது... படிச்சிட்டு மத்த வேலையை பார்க்கிறவங்களையூம் புடிச்சு உள்ள போடனும் ஸார்... நான் பெரிய மற்றும் சிறிய டவுசர்ஸ் தமிழிம்சை . மாதிரி அரசியல்வியாதிகளை சொல்றேன்னு பகோடாஸ் பாஞ்சு வரவாணாம்..டீம்காவுல இவ்ளோ படிச்சவன்க இருகானுவளான்னு தெர்ல... ஓகேவா... மற்றும் ராதாகிருஷ்ணன் மாதிரி டாக்டர் படிச்சிட்டு ஐஏஎஸ் வேலைக்கு போனவங்க கிட்ட இருந்தும் ஃபைன் போட்டு வசூல் பண்ணனும்.. இல்லைன்னா எங்க ஃப்யூச்சர் ஜி ஸ்டைலில் புல்டோசர் வச்சி அவிங்க கழட்டனும்... என்ன நான் சொல்றது...


karthik
செப் 18, 2024 08:39

அதேபோல மருத்துவம் படித்துவிட்டு மருத்துவ தொழில் பார்க்காமல் அரசியல் கட்சி சார்பாக அல்லது வேறு தொழில் செய்ய போய்விட்டாலும் அதிக தொகை அபராதம் விதிக்க வேண்டும் மற்றும் பட்டத்தை பரிக்கவேண்டும்.


selliah Ravichandran
செப் 18, 2024 07:45

They're ready to steady any collage.but fee's everybody knows low sleeping.then why this dramatic action from the student.


chennai sivakumar
செப் 18, 2024 07:18

அப்பாடா. அதேபோல தற்கொலை செய்து கொண்டாலும் அபராதம் வசூலிக்க வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை