உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மது உடலுக்கு தீங்கு; விழிப்புணர்வு மக்கள் மத்தியில் இருக்கா?: சிறப்பு விவாதம்

மது உடலுக்கு தீங்கு; விழிப்புணர்வு மக்கள் மத்தியில் இருக்கா?: சிறப்பு விவாதம்

சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும் , செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது.தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது. வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும், சிறப்பு பேச்சுகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது.

இன்றைய நிகழ்ச்சியில்

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மது ஒழிப்பிற்காக இதுவரை ஒதுக்கப்பட்ட நிதி முறையாக பயன்படுத்தப்படுகிறதா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.இந்நிலையில் மதுவிலக்கு நிதி; எதற்கெல்லாம் செலவாகிறது? என்பது குறித்து விவாதம் நடந்தது. அப்போது, மது உடலுக்கு தீங்கு என்ற விழிப்புணர்வு மக்கள் மத்தியில் இருக்கா? என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

இது தொடர்பான விவாதத்தை பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

https://www.youtube.com/watch?v=rrXQR_F7yzk


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

J.Isaac
ஜூன் 22, 2024 14:56

போராட்டம் நடத்தும் பிஜேபி,அதிமுக கட்சி தலைவர்கள், தொண்டர்கள் மது கடைப்பக்கம் போகாமல் இருந்தாலே டாஸ்மாக் மூடப்படும்


RajK
ஜூன் 22, 2024 13:20

மதுவிலக்கு துறை உண்மையில் மது வளர்ப்பு துறையாக இருக்கிறது. திரைப்படங்களில் மது குடிப்பதை ஊக்குவிக்கும் விதத்தில் காட்சி அமைக்கப்பட வேண்டும்


Sudhakar NJ
ஜூன் 22, 2024 12:54

மது உடலுக்கு தீங்கு என்று ஆட்சியாளர்கள் எண்ணத்தில் இருந்திருந்தால் அவர்கள் மதுக்கடையையே நடத்தமாட்டார்கள். குடிப்பவர்களுக்கு அது எட்டாக்கனியாக இருந்து, ஒருநாள் மது முழுவதுமாக இல்லாத நிலை வரும். ஆனால் தற்போதுள்ள அமைச்சருக்கு மது அருந்துபவர்களை குடிகாரர்கள் என்று சொன்னால் கோபம் வருமாம். மதுபிரியர்கள் என்றுதான் சொல்லவேண்டுமாம். இப்படி இருந்தால் விழிப்புணர்வு என்பது label லில் எழுதி வைப்பது போலதான். ஆகவே எரிவதை பிடுங்கினால் கொதிப்பது தானாக அடங்கிவிடும்.


தமிழ்வேள்
ஜூன் 22, 2024 11:58

கள்ளச்சாராயம் குடித்து செத்தால் , ரூபாய் பத்து லட்சம் கிடைக்கும் என்ற விழிப்புணர்வு மிக அதிக அளவில் உள்ளது .....


Arul. K
ஜூன் 22, 2024 11:42

தெரியும் ஆனால் தெரியாது


Samy Chinnathambi
ஜூன் 22, 2024 09:56

இந்த பாதிப்புகளுக்கு முதல் காரணமே இந்த நாலு பேரை வைத்து விவாதம் நடத்து முன்னணி செய்தி சானல்களின் நெறியாளர்கள் என்ற போர்வையில் வாழும் ஜாலராக்கள் தான்.. .கடந்த அதிமுக ஆட்சியில் சும்மா எங்கயோ ஒரு பேனர் விழந்ததற்கு அதை எடப்பாடியே சாய்த்து கொன்று விட்டதை போன்று விவாதம் நடத்தினார்கள். ஒரு குழந்தை அவர் அப்பா வெட்டிய ஆழ்துளை கிணற்றில் விழுந்ததற்கு ஏதோ எடப்பாடியே குழந்தையை தள்ளிவிட்டு கொன்றதை போன்று ஒரு தோற்றத்தை உருவாக்கினார்கள். ஒரு லாக்கப் டெத் நடந்ததற்கு ஏதோ எடப்பாடியே அடித்து கொன்றதை போன்று செய்தி உருவாக்கினார்கள். இந்த மூன்று வருடமும் இந்த செய்தி சேனல்களின் நெறியாளர்கள் விலைவாசி உயர்வு, சட்ட ஒழுங்கு அவலம், போதை மருந்து , கள்ள சாராயம், மின்வெட்டு , தண்ணீர் பிரச்சினை , ரவுடியிசம், கட்ட பஞ்சாயத்து, நில அபகரிப்பு, மணல் கடத்தல், மலைகள் உடைப்பு, காடுகள் ஆக்கிரமிப்பு, 28 லாக்கப் டெத், மின்கட்டண உயர்வு, பால் கட்டண உயர்வு, பேருந்து நிலைய பிரச்சினை , சட்ட விதி மீறிய பேனர்கள் , கொடி கம்பங்கள், தரமற்ற உணவு, என்று மக்களின் பிரச்சினை எதையுமே விவாதிக்கவில்லை.


ராமகிருஷ்ணன்
ஜூன் 22, 2024 09:47

மதுவிலக்கு நிதி முழுமையாக கட்சியினரால் சுருட்ட படுகிறது என்று சொல்ரீங்க.


அப்புசாமி
ஜூன் 22, 2024 09:46

மது உடலுக்கு தீங்கு விளவிக்காது. .குடிக்கிற கள்ளச்சாராயம் தான் விஷம்.


pandit
ஜூன் 22, 2024 12:35

டாஸ்மாக் மது என்று திருத்தி படிக்கவும்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை