உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 39 என்பது 52 தொகுதியாகவும் மாறலாம்: முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி பேட்டி

39 என்பது 52 தொகுதியாகவும் மாறலாம்: முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி பேட்டி

சென்னை: 'தமிழகத்திற்கான லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என்பது பொருத்தமற்றது' என, முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் கோபால்சாமி தெரிவித்தார்.இது குறித்து, அவர் நம் நாளிதழுக்கு அளித்த பேட்டி: கடைசியாக 2008ல் தொகுதி மறுவரையறை நடந்தது. முதலில் 1981 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், நடத்த திட்டமிடப்பட்டது. பிறகு அது சரியாக இருக்காது எனக் கூறி, 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மறுவரையறை செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்கு, தங்களுக்கான லோக்சபா தொகுதிகள் குறைந்து விடும் எனக் கூறி, பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=8pispgbr&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதனால், உறுப்பினர் எண்ணிக்கை மாறாமல், தொகுதிகளின் எல்லைகள் மட்டும் மாற்றியமைக்கப்பட்டன. அப்போது, 2026க்கு பிறகு எடுக்கப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், மீண்டும் லோக்சபா, மாநில சட்டசபை தொகுதிகளை மறுவரையறை செய்ய தீர்மானிக்கப்பட்டது. தொகுதி மறுவரையறை செய்ய வேண்டுமானால், அதற்கு முதலில் பார்லிமன்டில் சட்டம் கொண்டு வர வேண்டும்.கடந்த 2008 போலவே, லோக்சபாவின் 543 தொகுதி எண்ணிக்கையை, அப்படியே வைத்துக் கொண்டு, அந்தந்த மாநிலங்களுக்குள், தொகுதிகளின் எல்லைகளை மட்டும் மாற்றி அமைக்கலாம். அல்லது 543 என்ற எண்ணிக்கையை இரு மடங்காகக் கூட ஆக்கலாம். அப்படி செய்தால், அதை ஒவ்வொரு மாநிலத்திலும் எப்படி அதிகரிப்பது என்பதற்கு, விதிகள் வகுக்க வேண்டும்.மக்கள் தொகை அடிப்படையில் மட்டும் அதிகரிப்பதா அல்லது வேறு காரணிகள் அடிப்படையில் அதிகரிப்பதா என்பதை முடிவு செய்ய வேண்டும். ஏற்கனவே, பார்லிமென்ட், மாநில சட்டசபைகளில், பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க, சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.எனவே, இப்போதிருக்கும் 543 தொகுதிகளோடு, கூடுதலாக 33 சதவீத தொகுதிகளை, அதாவது 179 தொகுதிகளை அதிகரிக்கலாம். அதன்படி பார்த்தால் தமிழகத்திற்கு 13 தொகுதிகள் அதிகரித்து, 52 தொகுதிகள் கிடைக்கும்; இதற்கும் வாய்ப்புள்ளது.பார்லிமென்டில் சட்டம் கொண்டு வந்து, அதற்கென ஒரு கமிட்டி அமைத்து, அதன்பிறகு மறுவரையறை செய்ய வேண்டும். அதற்கான எந்தப் பணிகளும் நடக்காத நிலையில், தமிழகத்திற்கு இத்தனை தொகுதிகள் குறையும்; உ.பி., போன்ற மாநிலங்களுக்கு அதிகரிக்கும் எனக் கூறுவது பொருத்தமற்றது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 47 )

RM Manivannan
மார் 03, 2025 13:47

வடமாநிலங்கள் வஞ்சிக்கப்படுகின்றன என்பது நகைப்புக்குரிய வாதம். சோம்பேறிகளை வளர்ப்பதற்கு வேண்டுமானால் இது உதவலாம். உபி, பீகார் போன்ற மாநிலங்கள் ஒட்டுண்ணிகள்.


ramesh
பிப் 26, 2025 22:19

ஓன்று அரை சதவீத ஆரியனே 98 சதவீத திராவிடனை இந்த வார்த்தைகளால் பேசுகிறானே இவன் மட்டும் தமிழ் நாட்டில் 98 சதவீதம் இருந்தால் என்ன வார்த்தை பேசுவான் .அதனால் தான் கடவுள் குதிரைக்கு கொம்பை கொடுக்காமல் விட்டான்


தாமரை மலர்கிறது
பிப் 26, 2025 21:00

ஒரு வடக்கத்தியரின் ஒட்டு வலிமை ஒரு தென்னகத்தினரின் ஒட்டு வலிமையை விட தற்போது குறைவாக உள்ளது. இதனால் வடஇந்திய மாநிலங்கள் வஞ்சிக்கப்பட்டு, அதிக வரிப்பணம் தென்னிந்தியாவில் செலவிடப்படுகிறது. மக்கள் தொகைக்கு ஏற்ப எம்பி சீட்கள் பிரிக்கபடும்போது, இந்த வேறுபாடு களையப்படும். தமிழகத்திற்கு கூடுதல் சீட்கள் கிடைக்கும். தமிழகம் வஞ்சிக்கப்படாது. வடமாநிலத்தோரின் தற்போதைய வஞ்சிக்கப்பட்டநிலை மாறும். ஒட்டு வலிமை அனைவருக்கும் சமமாகும்.


Mahendran Puru
பிப் 28, 2025 17:02

தாமரைகாரரின் காமெடி பதிவு. தென்னகத்தில் வரி வசூலித்து வடக்கேயும் மேற்கிலும் அள்ளி வீசுகிறான். இதில் அவர்களுக்கு தொகுதிகளை அள்ளிக் கொடுக்க திட்டம் போடும் தாமரை மலர வேண்டுமோ? கோபால்சாமி பேசும் ஹேசியம் ஒரு காமெடி.


Easwar Kamal
பிப் 26, 2025 18:21

இப்போது வரை தமிழகம்தான் கர்நாடக விட அதிகம் தொகுதி உள்ளது. மற்ற மாநிலமான கேரளா, தெலுங்கை, ஆந்திர நம்மை விட குறைவாகாவே உள்ளது. அது அப்படியே தொடரவேண்டும்.


அஞ்சுலட்சுமி
பிப் 26, 2025 15:16

இவர் சொல்வது சரி. வடக்கேயிருந்து பஞ்சம் பிழைக்க லட்சக்கணக்கில் இங்கே வந்துடறாங்க. இவிங்களுக்கு இங்கே ஓட்டுரிமை அளித்தால் தமிழகத்துக்கு 20,25 தொகுதிகள் அதிகம் கிடைக்கும்.


Balamurugan
பிப் 26, 2025 13:42

மக்கள் பிரச்சனைகளை சரிசெய்யாமல் பார்லிமென்டில் எதுக்கு எடுத்தாலும் எதிப்பு தெரிவித்து கேன்டீனில் பஜ்ஜி போண்டா சாப்பிட தான் இவனுக டெல்லிக்கு போறானுக. பேசாமல் மோடிஜியை சாகும் வரை பிரதமராக இருக்க நாட்டில் தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டும். பிரதமரை அநாகரீகமாக பேசுறவனுகள தூக்கி உள்ளே போட்டு மிதிக்கணும்.


Sridhar
பிப் 26, 2025 13:20

இதெல்லாம் திருட்டு கும்பலுக்கு எங்கே புரியப்போகுது? அவுங்களுக்கு வேண்டியது, எல்லாரும் ஹிந்தி ஹிந்தினு பேசணும், ஒருத்தர் எதிர்க்கும் இன்னொருவர் ஆதரிக்கணும், மொத்தத்துல சார் மேட்டரு பேசப்படக்கூடாது, அவ்வளவுதான்.


Oru Indiyan
பிப் 26, 2025 12:01

முஸ்லீம் தொகை பல மடங்கு அதிகமாக இருக்கும். அதனால். முஸ்லீம் ஒதுக்கீடு அதிகமாக ஆகும். அதனால் முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிகமாவார்கள்.


Kasimani Baskaran
பிப் 26, 2025 11:47

மக்கள் தொகையை அடிப்படையாகக்கொண்டு தொகுதி இருந்தால் போதிய சேவைகள் வழங்க எம்பிக்கள் அதிக வேலைப்பளு இல்லாமல் வேலை செய்ய முடியும். ஆனால் 40ம் வீணாய்ப்போனதுகள். கட்சி சொல்வதை கேட்டு ஆட்டம் போடும். அடங்கிப்போ என்றால் கேன்டீன் போய்விடுவார்கள். அவர்கள் சிறப்பாக செய்தது அமளி மட்டுமே.


N.Purushothaman
பிப் 26, 2025 11:24

திருட்டு திராவிடனின் சமூக நீதி தனியார் பள்ளியில் 70 லட்சம் மாணவர்கள் ...அரசுப்பள்ளியில் 55 லட்சம் மாணவர்கள் ...70 லட்சத்தில் முப்பது லட்சம் மாணவர்கள் மூன்றாம் மொழி படிக்கிறார்கள் ....அரசுப்பள்ளி என்பதால் மாணவர்களுக்கு அந்த வாய்ப்பு இல்லை ...ஆனால் அரசின் சலுகைகள் தனியார் பள்ளியில் படிக்க வைக்கும் பெற்றோர்களுக்கும் கிடைக்கும் ...மக்கள் தொகை வளர்ச்சிக்கேற்ப தொகுதி வரை முறை செய்தால் அதெற்க்கென பல நிலைகள் இருக்கு ...அதை எல்லாம் கடந்தால் தான் எத்தனை தொகுதிகள் போன்ற நிலவரங்கள் தெரிய வரும் ....அது தெரியாமலேயே திருட்டு திராவிடன் தொகுதி கம்மியா போயிடும்ன்னு உருட்ட ஆரம்பிச்சுட்டான் ....


முக்கிய வீடியோ