உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு சி.பி.ஐ., விசாரணை தேவை: அண்ணாமலை

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு சி.பி.ஐ., விசாரணை தேவை: அண்ணாமலை

சென்னை: சென்னை அயனாவரத்தில் உள்ள மறைந்த பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் இல்லத்தில் தமிழக பா.ஜ.க., தலைவர் அண்ணாமலை அவரது உருவபடத்திற்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.அவர் அளித்த பேட்டியில், சென்னை கொலை நகரமாக மாறிவருகிறது.நாளை பா.ஜ. மூத்த தலைவர்கள் 5 பேர் எல்.முருகன் தலைமையில் டில்லியில் பத்திரிகையாளர்களை சந்திக்கின்றனர்.சென்னையில் அரசியல் தலைவர் ஒருவர் கூலிப்படையினரால் கொல்லப்படுவது இதுவே முதல் முறை. ஆம்ஸ்ட்ராங் மரணத்திற்கு நியாயம் கிடைக்கவே இப்பிரச்னை தேசிய அளவில் கொண்டுசெல்லப்படும்.தேசிய பட்டியலினத்தவர்கள் ஆணையத்தில் 17 சம்பவங்கள் தொடர்பாக புகார் அளிக்கப்படும். கொலைக்கு பின்னால் யார் இருக்கிறார்கள். அரசியல் பின்புலம் உள்ளதா என ஆராய வேண்டும். இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

HUMAYUN KABIR.R
ஜூலை 09, 2024 21:23

சிபிஐ க்கு போனா நைசா நீ தப்பிக்கலாம் னு பாக்குறே. வாய்ப்பில்லை ராசா. களி நிச்சயம்.


தமிழகத்திலிருந்து 40/40
ஜூலை 09, 2024 18:44

ஆமா ஆமா அது தேவை தான், அதுக்கு முதல்ல இந்தியா உயிரோட இருக்கணுமே, எப்ப இந்தியாவை விற்க போறீங்க அடுத்த நாட்டுக்கட்ட, அட கூமுட்டை தேசிய கட்சிகளே


ஆரூர் ரங்
ஜூலை 09, 2024 11:55

நடந்தது அரசியல் தலைவர் கொலை. அதுவும் ஆளும் கட்சிக்கு எதிரானவர். எனவே மாநில போலீஸ் விசாரணை மீது நம்பிக்கையில்லை. இறந்தவர் குற்றங்களில் சம்பந்தப்பட்டவர் என்றாலும் நியாயமான விசாரணை மட்டுமே இது போன்ற வன்முறைகளைக் கட்டுப்படுத்தும்.


J.Isaac
ஜூலை 09, 2024 15:19

கொலைசெய்தவனுடைய அண்ணன், கடந்த ஆண்டு இதே நாளில் கொலை செய்யப்பட்டவருடைய கோஷ்டியால் கொலைசெய்யப்பட்டார் என்கிறார்களே ,உண்மை பேசும்,ஆரூர் அவர்களே


naranam
ஜூலை 09, 2024 09:37

ரவுடிக்கு ரவுடியால் தான் சாவு. தன் வினைத் தன்னைச் சுடும்! இதில் அரசியல் செய்வதை அண்ணாமலை நிறுத்திக்கொள்ள வேண்டும்.


குஹன்பிரபு
ஜூலை 09, 2024 00:23

ரவுடிகளை ரவுடிகள் வெட்டுனதுக்கெல்லாம் சி.பி.ஐ, என்.ஐ.ஏ சி.ஐ.ஏ விசாரணையெல்லாம் வெக்க முடியாது.


Kulasekaran A
ஜூலை 08, 2024 23:13

ஆர்ம்ஸ்ட்ராங் பெரிய தியாகி மட்டுமல்ல. தமிழகத்தின் முதுபெரும் தலைவர்.இவரது மரணம் தமிழகத்தை மட்டுமல்ல, அண்ணாமலையையும் உலுக்கி விட்டது. இப்படிப்பட்ட ரவடிகளாக இருந்து "தியாகி"களாக மாறியவர்களுக்கெல்லாம் அரசியலுக்காக முக்கியத்துவம் கொடுப்பதை தினமலரும் அண்ணாமலையும் தவிர்க்க வேண்டும்


Saravana
ஜூலை 08, 2024 22:01

DMK upes arudra case la y are you pulling annamalai.200 rupees parcel Unga aachi Thane.proove it Ungal katchi thalaivargal cbi ya partha yen terithu odukirarkal.100% honest guys? ?


Kesavan
ஜூலை 08, 2024 21:15

மாநில அரசு விசாரித்தால் ஆருத்ரா விவகாரம் வெளியில் வரும் என்பதால் அதில் பிஜேபியின் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதால் அதை மூடி மறைக்க சிபி ஐ விசாரணை கேட்கப்படுகிறது இந்தியாவில் நடக்கும் பல குற்ற செயல்களுக்கு கொலைகளுக்கு பின்னால் பிஜேபி ஆட்கள் இருக்கிறார்களா என்பதை பற்றி அந்தந்த மாநில போலீசார் விசாரிக்க வேண்டும் அப்போதுதான் நியாயம் கிடைக்கும் அரசியலுக்கு எந்த இழிச்செயலையும் செய்யக்கூடியவர்கள் பிஜேபினர்


ஆரூர் ரங்
ஜூலை 09, 2024 11:58

ஆருத்ரா மேட்டரில் தனக்கு ஏதாவது பெரிசா தேறுமா என ஆளும் ஆட்கள் எதிர்பார்ப்பதாகவும் அதனால்தான் விசாரணை மந்தமாக நடக்கிறது எனவும் உறுதியாக நினைக்கத் தோன்றுகிறது.


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 08, 2024 21:02

டீம்காவை கூட்டணிக்கு அச்சுறுத்த எங்குளுக்கு சிபிஐ விசாரணை வேணும் ........


Narayanan Muthu
ஜூலை 08, 2024 20:28

கொள்ளை கூட்டங்கள் மோதிக்கொள்ளும்போது மரணங்கள் சகஜமே. ஆதாய கொலைகளை / ரவுடிகளின் பழி தீர்க்கும் கொலைகளை அரசியல் கொலை என கேவலமான அரசியல் செய்யும் பிறவிகள் யோசிக்கவேண்டும். மக்களை திசை திருப்பும் எந்த சக்தியையும் ஏற்கக்கூடாது.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை