வாசகர்கள் கருத்துகள் ( 1 )
லஞ்சத்தின் அடிப்படையில் சேவை செய்யும் குற்றவாளிகளான அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதே தவறு.ஓய்வடைந்தால் ஓய்வூதியம் வழங்குவதென்பது ஒரு கேடு.
மத்திய அரசு அறிவித்துள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை, தமிழ்நாடு தலைமை செயலக சங்கம் வரவேற்றுள்ளது.சங்க தலைவர் வெங்கடேசன் அறிக்கை:லோக்சபா தேர்தலின்போது, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக, பா.ஜ., எந்தவொரு வாக்குறுதியும் அளிக்கவில்லை. மீண்டும் மூன்றாவது முறையாக ஆட்சியில் அமர்ந்த பின், ஒருங்கிணைந்த ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியத்தை, 2025 ஏப்., 1 முதல் நடைமுறைப்படுத்தும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.ஆட்சி பொறுப்பேற்று, 40 மாதங்கள் கடந்த நிலையில், தேர்தல் வாக்குறுதியான, பழைய ஓய்வூதிய திட்டத்தை எள்ளளவும் மாற்றமின்றி, தி.மு.க., அமல்படுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
லஞ்சத்தின் அடிப்படையில் சேவை செய்யும் குற்றவாளிகளான அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதே தவறு.ஓய்வடைந்தால் ஓய்வூதியம் வழங்குவதென்பது ஒரு கேடு.