உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மத்திய பிரதேசத்தை மாற்ற வாருங்கள்: தமிழக தொழில் அதிபர்களுக்கு முதல்வர் மோகன் யாதவ் அழைப்பு

மத்திய பிரதேசத்தை மாற்ற வாருங்கள்: தமிழக தொழில் அதிபர்களுக்கு முதல்வர் மோகன் யாதவ் அழைப்பு

கோவை: 'தமிழகத்திற்கும், மத்திய பிரதேசத்திற்கும் கலாசாரம், உள்ளிட்டவற்றில் பல்வேறு ஒற்றுமை உள்ளது. மத்திய பிரதேசத்தை முதன்மை மாநிலமாக மாற்ற வாருங்கள்' என ம.பி முதல்வர் மோகன் யாதவ் கூறினார். வடமாநில அரசுகள், தமிழகத்தில் உள்ள தொழிலை தங்கள் மாநிலத்தில் துவக்கி, வேலை வாய்ப்பு வழங்க முயற்சிக்கின்றன. ம.பி., மாநில குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை செயலர் தலைமையிலான குழுவினர் கோவையில் முகாமிட்டு, தொழில்துறையினரை சந்தித்தனர். இந்நிலையில், இன்று(ஜூலை 25) கோவை வந்த ம.பி முதல்வர் மோகன் யாதவ் அனைத்து தொழில் துறையினரையும் நேரில் சந்தித்து கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சி கோவையில் உள்ள லீ மெரிடியன் ஓட்டலில் நடைபெற்றது. தொழில்துறையினரின் எதிர்பார்ப்புகளை கேட்டறிந்த முதல்வர் மோகன் யாதவ் அம்மாநிலத்தில் தொழில் துவங்குவதால் கிடைக்கும் சலுகைகள், அரசு திட்ட உதவிகள் குறித்து விரிவாக கூறினார். பின்னர், மோகன் யாதவ் பேசியதாவது: மத்திய பிரதேசத்தை முதன்மை மாநிலமாக மாற்ற வாருங்கள். மத்தியபிரதேச மாநிலத்தின் தொழில் வளர்ச்சி கழக அலுவலகம் கோவையில் துவங்கப்படும். தமிழகத்திற்கும், மத்திய பிரதேசத்திற்கும் கலாசாரம், உள்ளிட்டவற்றில் பல்வேறு ஒற்றுமை உள்ளது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழில்முனைவோருடன் பேச வாய்ப்பு கிடைத்தது. தமிழகம் மற்றும் மத்திய பிரதேச மாநில தொழில்துறையினர் இணைந்து செயல்பட்டு, உற்பத்தி துறையில் மாநிலத்தை முன்னேற்றுவோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Vijay D Ratnam
ஜூலை 25, 2024 22:35

மத்திய பிரதேசம், துறைமுகம் இல்லாத, மன்னிக்க, கடற்கரையே இல்லாத மாநிலம். இதை பார்க்கும் போதுதான் உணரமுடியும் எப்படிப்பட்ட அருமையான நிலப்பரப்பு நம் தமிழகம் என்று. வடக்கே பழவேற்காடு தொடங்கி தெற்கே கொல்லங்கோடு வரைக்கும் 1076 கிமீ நீளம் கொண்ட கடற்கரை. எண்ணூர், சென்னை, காரைக்கால், தூத்துக்குடி, குளச்சல் என்று பெரிய துறைமுகங்கள். பல மீன்பிடி துறைமுகங்கள். தத்தி தற்குறி மாதிரி இல்லாம ஒரு நல்ல படித்த செயல்திறன் மிக்க ஒரு முதலமைச்சர் மட்டும் நமக்கு வாய்த்தால், மாநிலத்தின் வளர்ச்சியை சர்வதேச அளவில் உச்சத்திற்கு கொண்டு செல்ல முடியும். ஆனால் இங்கே சீனா வீசும் எலும்புத்துண்டுக்கு வாலாட்டும் ஜென்மங்கள் மாநிலத்தின் வளர்ச்சியை தடுத்து நிறுத்துகிறதே. நாட்டின் 40 சதவிகித தாமிர தேவையை பூர்த்தி செய்துகொண்டு இருந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு சங்கு ஊதியாகிவிட்டது. அதை நம்பி இருந்த மக்கள் சோற்றில் மண் அள்ளி போட்டாச்சு. கொல்லங்கோடு அருகில் இணையம் பகுதில் அமைய இருந்த டிரான்ஷிப்மென்ட் மதர்போர்ட்டை வரவிடாமல் செய்தாகிவிட்டது. சென்னை சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு சாவுமணி அடித்தாகிவிட்டது. கூடங்குளம், குலசேகரப்பட்டினம் ஒரு வழியாக இந்த கூலிக்கு மாரடிக்கும் கும்பலிடம் இருந்து தப்பிவிட்டது. இப்போ என்னடாவென்றால் ரயில்வே அமைச்சகம் அமைக்க இருக்கும் ராமேஸ்வரம் தனுஷ்கோடி ரயில்பாதை எங்களுக்கு வேண்டாமென்று கடிதம் அனுப்பியிருக்கிறானுங்களாம்.


தாமரை மலர்கிறது
ஜூலை 25, 2024 20:20

வடமாநில தொழிலாளிகள் தொடர்ந்து தமிழகத்திற்கு வருவதை தடுக்க, மத்திய பிரதேஷத்தில் தமிழக தொழில் அதிபர்கள் தொழில்கள் துவங்கினால், பல சலுகைகளை மத்திய அரசு செய்து கொடுக்கும். முதலாண்டு வரி முழுவதும் நீக்குவது நல்லது. இலவச மின்சாரம் போன்வற்றை மத்திய அரசே செலவை ஏற்றுக்கொள்வது நல்லது. தமிழக தொழிற்சாலை மத்யபிரதேஷத்திற்கு சென்று பணம் பண்ணுவதன் மூலம் தமிழக தொழில் அதிபர்கள் தான் செல்வம் சேர்க்க போகிறார்கள். அதனால் தமிழக அரசும் நிதியுதவி போன்ற சில சலுகைகள் கொடுப்பது நல்லது. மத்திய பிரதேஷத்தில் தொழிற்சாலைகள் பெருகினால், தமிழத்திற்கும் நல்லது. ஏனனில் அங்குள்ள தொழிலாளிகள் தமிழகத்திற்கு வரத்தேவை படாது. அதனால் இங்குள்ள தொழிலாளிகள் வேலை பெறுவர்.


Barakat Ali
ஜூலை 25, 2024 18:33

முதலீடுகளை ஈஈஈர்ர்ர்ர்க்க எங்க தல புலிகேசி மாதிரி, மாஜி தல பழனி மாதிரி நீங்க ஜப்பான், பிரேசில் இப்படியெல்லாம் வெளிநாடு போகலையா ???? அப்போ நாங்களும் உங்களை நம்பமாட்டோம் .....


venugopal s
ஜூலை 25, 2024 17:54

மத்தியப்பிரதேசம் என்றாலே எப்படி வருவார்கள்? இதில் பாஜக ஆளும் மாநிலம் வேறு,உசிருக்கு உத்தரவாதம் இல்லை!


hari
ஜூலை 25, 2024 21:13

ஏல வேணு... நீயும் உருப்படாதே.... மத்தவங்களையும் உருப்பட விடாதே


Sankar Ramu
ஜூலை 25, 2024 17:27

திராவிட மாடலில் திருப்பூரை காலி செய்திடுவார்கள் போல.


S.V.Srinivasan
ஜூலை 25, 2024 16:26

தமிழக தொழில் அதிபர்களை தொழில் துவங்க அழைக்கும் மத்திய பிரதேஷ் முதல்வருக்கு எதிராக தமிழகத்தில் போராட்டம். தமிழக மந்திரி அறிவுப்பு.


S. Narayanan
ஜூலை 25, 2024 16:18

தமிழ் நாட்டில் தொழில் தொடங்கும் மனநிலையில் இருக்கும் பலர் திமுக அரசு முட்டு கட்டையாக இருப்பதால் பலர் இந்த சந்தர்பத்தை நழுவ விட கூடாது


v j antony
ஜூலை 25, 2024 15:57

தமிழகத்தில் தற்போதுள்ள மின்சார உயர்வு ,அனுமதிபெற அதிகப்படியான கமிஷன் ஆட்கள் பற்றாக்குறை ,நில மதிப்பு உயர்வு, அரசியல் தலையீடு போன்ற சிக்கல்கள் உள்ளதால் பல தொழிலில்கள் பிற மாநிலங்களுக்கு மாற வாய்ப்புகள் உள்ளது இங்குள்ள அரசு எப்போதும் மத்திய அரசுடன் சண்டைபோடுவதில் குறியாக உள்ளது


V RAMASWAMY
ஜூலை 25, 2024 15:28

கர்நாடக தொழில் அதிபர்களையும் கூப்பிடுங்கள், ஏனென்றால் அவர்கள் கர்நாடக அரசின் பல ஆதரவற்ற கொள்கைகளினால் அதிருப்தியான நிலையிலிருக்கின்றனர்.


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி