உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தாலிக்கொடியை பறிமுதல் செய்த சுங்கத்துறை; சென்னை ஐகோர்ட் கண்டிப்பு

தாலிக்கொடியை பறிமுதல் செய்த சுங்கத்துறை; சென்னை ஐகோர்ட் கண்டிப்பு

சென்னை: பெண் பயணியிடம் இருந்து தாலிக்கொடியை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரியை சென்னை ஐகோர்ட் கண்டித்துள்ளது.இலங்கை குடியுரிமை பெற்ற தனுஷிகா என்ற பெண், 2023ல் ஜெயகாந்த் என்பவரை மணந்து கொண்டார். திருமணத்திற்கு பின், கணவர் பிரான்ஸ் சென்றுவிட்டார். தனுஷிகா தமிழகத்தில் உள்ள கோவில்களில் வழிபாடு நடத்த, இலங்கையில் இருந்து மாமியார், நாத்தனார் உள்ளிட்ட உறவினர்களுடன் சென்னை விமான நிலையம் வந்துள்ளார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=tt9sf3jw&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அப்போது, சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள், தனுஷிகா அணிந்திருந்த தாலிக்கொடி பெரிதாக இருப்பதாக கூறி, பறிமுதல் செய்தனர். தனக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்துள்ளதாகவும், இந்த நகை அனைத்தும் தன் சொந்த நகை என்று கூறிய நிலையிலும், அதை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த சம்பவத்தின்போது, சுங்கத்துறையினர் தன்னிடம் கொடூரமாக நடந்து கொண்டதாகவும் தனுஷிகா புகார் தெரிவித்தார். வழக்கை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரித்தார். சுங்கத்துறை தரப்பில், 'மனுதாரர், வெளிநாட்டை சேர்ந்தவர் என்பதால், அவர் தங்க நகை அணிந்து கொண்டு வர முடியாது; பையிலும் எடுத்து வர முடியாது. சட்டப்படி தான் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது' என்று தெரிவித்தனர்.வழக்கை விசாரித்த நீதிபதி, தாலிக்கொடியை பறிமுதல் செய்த, சுங்கத்துறை அதிகாரிக்கு கண்டனம் தெரிவித்தார். நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: தாலியின் முக்கியத்துவத்தை கருத்தில் கொள்ளாமல், அதிகாரி அதை பறிமுதல் செய்துள்ளார். தாலி அணிந்திருப்பது, இந்த நாட்டின் கலாசாரம். அதை கழற்றும்படி ஒரு பயணியிடம் கூறுவதும், வலுக்கட்டாயமாக பறிப்பதும், இந்த நாட்டின் கலாசாரத்தையும், ஹிந்து மத நடைமுறைகளையும் நிர்மூலமாக்குவதாக உள்ளது. எந்த காரணத்துக்காகவும், அதை சகித்துக்கொள்ள முடியாது. குறிப்பிட்ட அந்த அதிகாரி, கெட்ட நோக்கத்துடன், மற்ற அதிகாரிகளின் கவனத்தை திசை திருப்பி, அதன் மூலம் வேறு யாருக்கோ பயன் கிடைக்கச் செய்யும் நோக்கத்துடன் இப்படி நடந்திருப்பது போல இருக்கிறது.எனவே, சுங்கத்துறை முதன்மை கமிஷனர் விரிவான விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை விடுவிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.ஒரு நடுத்தரக் குடும்பத்தில் 11 பவுனில் தாலிக்கொடி அணிந்திருப்பது சகஜமான நடைமுறை தான். எனவே, சோதனை நடத்தும் அதிகாரிகள், மதம் தொடர்பான நடைமுறைகளுக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும் என்றும் கோர்ட் தெரிவித்துள்ளது. சுங்கம் தொடர்பான சட்டம் ஏற்படுத்தும்போது, பயணிகள் அணிந்திருக்கும் நகைகளுக்கு பார்லிமென்ட் விலக்கு அளித்துள்ளது என்பதை அதிகாரிகள் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் கோர்ட் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

ram
பிப் 08, 2025 12:40

Useless customs officers, they clearly know the culprits and help them to clear customs checks there but only they show the power to innocent passengers whoever worked hard for their family.


Barakat Ali
பிப் 08, 2025 01:16

இந்த நாட்டின் கலாசாரத்தையும், ஹிந்து மத நடைமுறைகளையும் நிர்மூலமாக்குவதாக உள்ளது. அப்படிங்களா ???? தாலியை அறுக்கும் திராவிட கும்பல் செய்தது எந்த கலாச்சாரத்தின் அடிப்படையில் ????


நிக்கோல்தாம்சன்
பிப் 07, 2025 21:39

அந்த அதிகாரியின் பெயர் கிரிப்டோ அன்பு அல்லவா ?


K.n. Dhasarathan
பிப் 07, 2025 20:48

அந்த சுங்க அதிகாரி யார் ? வெளிநாட்டுக்காரரா ? எங்கிருந்து பிடித்தார்கள் அவரை ? இங்கு தாலிக்கு எவ்வளவு மதிப்பு என்பது தெரியாத ஒருவர் எப்படி சுங்க அதிகாரி ஆனார் ? ஏன் ஐகோர்ட் மிக மிக மென்மையாக நடந்து கொள்கிறது ? இந்த வழக்கு ஒரு 10 - 20 வருடங்கள் நடக்கணும், அந்த இலங்கை பெண் அதற்காக அங்கும் இங்கும் அலையணுமா ? தாலியை தர மாட்டார்களா ? அவரை மேல் அதிகாரி உடனடியாக கைது பண்ணி சிறையில் அடாய்த்திருந்தால் அனைவருக்கும் பாடம் கிடைக்கும். இதுபோல அடாவடி அதிகாரிகளால் பயணியர் எத்துணை துன்பம் அடைந்திருப்பார்கள் ? அந்த அதிகாரி எளிதில் தப்பி விடுவார் அல்லது எந்த நடவடிக்கையும் இல்லாமல் மறுபடியும் உலா வருவார், எல்லாம் தலை எழுத்து, ஐகோர்ட்டுக்கு ஒன்று சொல்கிறேன், இந்த கண்டிப்பு, அறிவுரை, எதுவும் வேலைக்கு உதவாது, தண்டனை தான் பலன் தரும், இனிமேலாவது ஐகோர்ட் திருத்திக்கொள்ளனும்.


சிட்டுக்குருவி
பிப் 07, 2025 20:26

தெளிவில்லாத சட்டங்களால் ஏற்படும் அவதிகள் இதுபோன்றவைகள் .ஒவ்வொருவரும் இவளவு தங்க நகைகள் அரசுக்கு அறிவிக்கப்படாமல் வைத்துள்கொள்ளலாம் என்று சட்டம் உள்ளது .அந்த அளவுக்கு குறைந்திருந்தால் கஸ்டம் சோதனைக்கு /பறிமுதலுக்கோ உட்படுத்தக்கூடாது . முடிந்தால் வெளிநாட்டவர்களாயிருந்தால் அவர்கள் பாஸ்ப்போர்ட்டில் குறிப்பெழுதி திரும்பி செல்லும்போது எடுத்துச்செல்கிறார்களா என்றும் உறுதி செய்துகொள்ளலாம் .திருப்பி எடுத்து செல்லவில்லையென்றால் அதற்குண்டான இறக்குமதி வரியை செலுத்தசொல்லல்லாம் .


தாமரை மலர்கிறது
பிப் 07, 2025 20:00

சுங்கத்துறை பதினோரு பவுன் தாலியை பறிமுதல் செய்ததில் எந்த தவறும் இல்லை. எல்லாவற்றுக்கும் வரி செலுத்த வேண்டும்.


Vel1954 Palani
பிப் 07, 2025 19:38

தாலி மகத்துவம் தெரியாத சுங்க ஆபிஸ் மடையர்களை தமிழ்நாட்டை விட்டு விரட்ட வேண்டும். மத்திய அரசு யோசித்து அந்தந்த மாநில அரசின் கலாச்சாரத்தை மதிக்க அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். தங்கத்தினால் ராக்கி சங்கிலி பறிமுதல் செய்வானா .


Ray
பிப் 07, 2025 19:34

நல்ல தீர்ப்பு மத்தியரசின் எல்லா துறைகளை போலவே வருமான வரித்துறையும் எல்லைமீறி போய்க்கொண்டிருக்கிறது என்பதற்கு இந்த வழக்கே நல்ல உதாரணம் இதுவும் ஒரு வகை வழிப்பறிதான் பறிமுதல் செய்யப் படும் நகைகள் எங்கே போகிறது என்று IT துறையினர் வெள்ளை அறிக்கை வெளியிடுவார்களா? ஒரு வழக்கில் லாக்கரிலிருந்து பறிமுதல் செய்யப் பட்ட நகைகளை போன வாரம் அந்த 81 வயது முதியவர் திருப்பிக் கேட்டபோது IT துறையினரால் அந்த நகைகளை ஒப்படைக்க முடியாமல் அவற்றை தேடிக்கொண்டிருந்த செய்திகள் வந்ததே


Appan
பிப் 07, 2025 19:18

இந்த சுங்க அதிகாரியை அப்பவே தண்டனை கொடுத்து இருக்க வேணும் .இந்த சுங்க அதிகாரிகள் தான் மும்பாய் தீவிர வாதத்திற்கு வெடிமருந்து வர உதவினார்கள். அதுவும் தலைமை சுங்க அதிகாரிதான் இதை செய்தார்.. இப்படி பட்ட சுங்கத்துறை தான் அப்பாவி மக்களை துன்புறுத்துகிறது.


GMM
பிப் 07, 2025 15:07

இலங்கை வெளிநாட்டினர் தங்க நகை அணிந்து வரக்கூடாது என்பது சட்டம். தங்க தாலி கொடியாக இருந்தாலும் பழுது வரும். அப்போது பெண் மஞ்சள் கயிறு கட்டுவது வழக்கம். சட்டம் அனுமதிக்காத போது இலங்கை பெண் வழக்காட வேண்டிய அவசியம்.? மத்திய அமைப்புகளுக்கு அச்சம் விளைவிக்க தான். பாராளுமன்ற விலக்கு இந்திய பெண்களுக்கு மட்டும். வெளி நாட்டினருக்கு சட்ட அனுமதி இல்லை என்றால் நீதிபதி ஏன் ஏற்க மறுக்கிறார். கண்டிக்கிறார். நடவடிக்கை எடுக்க உத்தரவிடுகிறார். கவர்னர் மீது அஞ்சாமல் விசாரிக்க துணியும் நீதி, பிற அதிகாரிகள் எல்லாம் தூசி மாதிரி. குறைந்தது மத்திய அதிகாரிகள் தவறாக வாதிடும் வக்கீலை கைது செய்ய வேண்டும். மக்களிடம் புகார் பெற்று தண்டிக்க வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை