உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருச்செந்தூர் கடலில் நீராட தடை ஏன் ?

திருச்செந்தூர் கடலில் நீராட தடை ஏன் ?

திருச்செந்தூர்: திருச்செந்தூர் கோயில் கடலோரப் பகுதிகளில் அதிக அளவில் ஜெல்லி மீன்கள் காணப்படுவதாலும், மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாலும் கடலில் பக்தர்கள் புனித நீராட கோயில் நிர்வாகம் தடை விதித்துள்ளது.துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள் தவறாமல் கடலில் புனித நீராடுவது வழக்கம். கோடை விடுமுறை என்பதால் தற்போது பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. கோயில் கடற்கரையில் சமீப காலமாக கண்ணாடி போன்ற ஜெல்லி மீன்கள் அதிகளவில் கரை ஒதுங்குகின்றன. இந்த ஜெல்லி மீன்களால், கடலில் குளிக்கும் பக்தர்களுக்கு தோல் பாதிப்பு ஏற்படுவதாக புகார்கள் வந்தன.இந்நிலையில், கடலோரப் பகுதிகளில் அதிக அளவில் ஜெல்லி மீன்கள் காணப்படுவதாலும், மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாலும், கடலில் பக்தர்கள் புனித நீராட கோயில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. இன்று (மே 19) விடுமுறை தினம், என்பதால் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், கோயிலுக்கு வந்த பக்தர்கள் கடலில் குளிக்காமல், நாழிக்கிணற்றில் மட்டும் குளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Dharmavaan
மே 19, 2024 20:07

இது உண்மையா பின்னால் சதி உள்ளதா


P. VENKATESH RAJA
மே 19, 2024 19:06

இன்று திருச்செந்தூர் முருகனை தரிசிக்க சென்றேன், ஆனால் கடலில் குளிக்க விடாமல் தடுத்து நிறுத்தி விட்டனர் முருகன் என்னை அவரது தீர்த்தத்தில் குளிக்கவிடாதது கவலை அளித்தது


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ