உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  த.வெ.க.,வில் சந்தோஷமாக இருக்கிறேன்

 த.வெ.க.,வில் சந்தோஷமாக இருக்கிறேன்

இதற்கிடையில், இசக்கி சுப்பையா கூறியதாவது: த.வெ.க., தலைமை வாய்ப்பளித்தால், இடைத்தேர்தலில் நின்று, அமோக வெற்றி பெற்று பணியாற்றுவேன். யார் வற்புறுத்தலும் இல்லாமல், சட்டசபை விதிகளின்படி, என் ராஜினாமா கடிதத்தை, சபாநாயகரிடம் அளித்தேன். அவர் நன்கு விசாரித்து, அவரது அதிகாரத்திற்கு உட்பட்டு, என் மனுவை ஏற்றுக் கொண்டார். அம்பாசமுத்திரம் தொகுதி காலியாக இருப்பதாக, தேர்தல் கமிஷனுக்கு தகவல் அளித்தார். அதை ஏற்று தேர்தல் கமிஷனும் தொகுதி காலியாக உள்ளதாக அறிவித்து விட்டது. இதில் எந்த சட்ட சிக்கலும் இல்லை. ஆனால், என் ராஜினாமாவை ஏற்கக்கூடாது என, அக்ரி கிருஷ்ணமூர்த்தி வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது. வழக்கு உடனடியாக முடிந்தால் பிரச்சனை இல்லை. வாய்தா மேல் வாய்தா கேட்டு வழக்கு நீடித்தால் பாதிக்கப்படுவது, அம்பாசமுத்திரம் தொகுதி மக்கள். என் ராஜினாமா ஏற்கப்பட்டதா அல்லது ஏற்கப்படவில்லையா என்ற கேள்விக்குறி வருகிறது. ஏற்கவில்லை என்றால், எம்.எல்.ஏ.,வாக செயல்பட அனுமதிக்க வேண்டும். முடிவு வரும் வரை, தொகுதி காலியாக இருக்ககூடாது. த.வெ.க.,வில் நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

டில்லி
செப் 02, 2026 21:22

உனக்காக ஓட்டு போட்டாங்களே அவங்க எல்லாம் ரொம்ப பாவப்பட்ட புத்திசாலிங்கப்பா


Kavi Priyan Adelaide
செப் 02, 2026 17:19

அப்புறம் ஏங்க தலைவரே ராஜினாமா பன்னதுக்கப்புறமும் நான் MLA வாவே தொடர ஆசைபடுரேனு மனு போட்டுறிக்கீங்க.. கேட்ட பதவி ஏதும் கிடைக்கலங்கிற ஆதங்கமோ..? விளங்கிடும்…


Lakshminarasimhan
செப் 02, 2026 07:58

அதான் பொட்டி வாங்கியாச்சே பிறகு எங்கே சந்தோஷத்துக்கு குறைச்சல் இவரு முதல்வர் விஜய் போல உம்முனா இருக்கனோம்


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி