உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நாட்டை மீட்டெடுக்க வேண்டிய தேர்தல்: பிரசாரத்தில் கனிமொழி பேச்சு

நாட்டை மீட்டெடுக்க வேண்டிய தேர்தல்: பிரசாரத்தில் கனிமொழி பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருநெல்வேலி: வரும் லோக்சபா தேர்தல் நாட்டை மீட்டெடுக்க வேண்டிய தேர்தல் என திமுக எம்.பி கனிமொழி கூறினார்.திருநெல்வேலி தொகுதி காங்., வேட்பாளர் ராபர்ட் புருஸ்-ஐ ஆதரித்து திமுக எம்.பி கனிமொழி பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது: வெள்ள பாதிப்பு ஏற்பட்ட போதெல்லாம் தமிழகத்திற்கு பிரதமர் மோடி வரவில்லை. தேர்தல் நேரம் என்பதால் தமிழகத்திற்கு 2 நாட்களுக்கு ஒருமுறை பிரதமர் மோடி வருகிறார். புயல், வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசு வழங்கவில்லை. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=uhn95k6d&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தேர்தல் நேரத்தில் தான் பிரதமருக்கு தமிழ் மீது பாசம் வருகிறது. தமிழ் தெரியவில்லை என பிரதமர் மோடி வருத்தப்படுகிறார். இந்தி கற்க கூறும் பிரதமர், நல்ல ஆசிரியரை பார்த்து தமிழ் கற்றுக்கொள்ளலாம். நம்முடைய முதல்வரிடம் சொன்னால், உடனே நல்ல ஆசிரியரை டில்லிக்கு அனுப்பி வைத்திருப்பார். இனிமேல் நீங்க டில்லியில் இருக்கமாட்டீங்க. பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தமிழ் சொல்லி தருவது பற்றி எங்களுக்கு கவலையில்லை. நிச்சயமாக தமிழ் கற்றுக்கொள்ளலாம். அது ஒன்றும் பெரிய விஷயமில்லை. ஆனால் ஒரு பக்கம் தமிழ் மீது பிரதமர் மோடிக்கு பாசம் வந்துள்ளது. மறுபக்கம் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தமிழக மக்களுடைய இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசுகிறார். வரும் லோக்சபா தேர்தல் நாட்டை மீட்டெ டுக்க வேண்டிய தேர்தல். சாதாரண, சாமானிய மக்களின் உரிமைகள் மற்றும் மீனவர்களின் உரிமைகளை மீட்டெடுக்க வேண்டிய தேர்தல். இவ்வாறு கனிமொழி பேசினார்.

கனிமொழி வாகனத்தில் சோதனை

தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி செல்லும் வழியில் கனிமொழியின் காரில் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். கனிமொழி காரில் பணம், பொருட்கள் எதுவும் சிக்கவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 56 )

Nagarajan S
ஏப் 06, 2024 19:40

ஐயாயிரம் கோடி மத்திய அரசு கொடுத்த இயற்கை பேரிடர் நிதியின் கணக்கை திமுக முதலில் கொடுத்து விட்டு வெள்ள நிவாரண நிதியை கேட்டால் koduthiruppargal


Lion Drsekar
ஏப் 06, 2024 14:25

நாட்டை மீட்டெடுக்க வேண்டிய தேர்தல்" இது மக்களின் இன்றைய எண்ணத்தை அப்படியே பிரதிபலிப்பதைக் கண்டு பூரிப்படைகிறோம்


Kalaiselvan Periasamy
ஏப் 06, 2024 13:53

அப்போது கொடுத்து விட்டு இப்போது கொடு என்றால் என்னய்யா பேச்சு இது அப்போதைய கருமாநிதி விறல் சூப்பிக்கொண்டு இருந்தரரோ ? எப்போது தமிழர்களை திராவிடன் என்று கூறினார்களோ அப்போதே தமிழ் இனம் அழிந்து விட்டது திராவிடம் என்றால் திருட்டும் புரட்டுமே


Balaji
ஏப் 06, 2024 05:31

மேடம் இப்ப சந்தன பொட்டு நெத்தில வந்து இருக்காமே என்ன விஷயம் பகுத்தறிவு கரஞ்சிட்டே இருக்கே


C.Jeyabalan
ஏப் 05, 2024 04:31

எல்லா கருத்துக்களும் கனிமொழிக்கு எதிராகவே உள்ளது.. வாசகர்கள் அனைவருமே மோடிக்கு சாலரா தட்டுபவர்கள் மட்டும்தானோ என சந்தேகம் எழுகிறது.. வெள்ளத்தில் நெல்லை தவித்தபோது டெல்லியிலிருந்து ஒரு நாய்கூட வரவில்லை என்பது உண்மைதானே கச்ச தீவை மத்திய அரசு மீட்க வேண்டியதுதானே என் தயங்குகிறது? மதம் என்ற வெறி நாயைக்கொண்டு மக்களை பிரித்து எப்படியாவது ஓட்டு வாங்க துடிக்கும் தேச துரோக கும்பல் இதுவரை ஆண்டு நாட்டை கெடுத்தது போதாதா?


HoneyBee
ஏப் 05, 2024 16:48

ஓகே உனக்கு ₹200 குவார்ட்டர் பிரியாணி கட்டாயம் வந்து விடும்


Rajah
ஏப் 05, 2024 17:49

அந்நியர்களால் அழிக்கப்பட்ட நமது கலாச்சாரத்தை மீட்டெடுக்க வேண்டிய தேர்தல் அந்நியர்களால் வழி நடத்தப்படும் உங்களுக்கு இது புரிய வாய்ப்பில்லை


isvrajan
ஏப் 04, 2024 16:28

தாங்கள் முதலில் - ஜி வழக்கிலிருந்து தங்களை காத்து கொள்ளுங்க அக்கா பின்னர் காப்பாற்றலாம் நீங்கள் நினைத்தபடி மழை வேளையில் ?


Sampathkumar Sampath
ஏப் 03, 2024 12:59

நீங்க நாட்டையே முழுங்கிட்டீங்க எங்க போயி மீட்டு எடுக்கிறது உலக மகா நடிப்புடா சாமி


kumar c
ஏப் 03, 2024 07:36

காப்பாத்த வேண்டியது நாட்டையா ? இல்ல G ல அடிச்ச நோட்டையா பார்லிமெண்ட்ல போயி ஹிந்தி தெரியாதுன்னு சரணடையதுக்கு பதிலா போட்டி போடாமலே இருக்கலாம்


Durai
ஏப் 03, 2024 05:23

கச்சத்தீவை தாரை வார்த்த மாதிரியா?


அசோகன்
ஏப் 02, 2024 12:06

கொள்ளை கூட்ட குடும்பமான உங்களிடம் இருந்துதான் தமிழ் நாடு விடுதலை பெறவேண்டும்......


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை