உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கவர்னர் வந்தார்; அமைச்சர் வரவில்லை...! தொடர்கிறது பட்டமளிப்பு விழா பாலிடிக்ஸ்

கவர்னர் வந்தார்; அமைச்சர் வரவில்லை...! தொடர்கிறது பட்டமளிப்பு விழா பாலிடிக்ஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நாகை: நாகையில் நடைபெற்ற பல்கலை பட்டமளிப்பு விழாவில் கவர்னர் வந்துவிட, விழாவை ஒட்டு மொத்தமாக புறக்கணித்து இருக்கிறார் அமைச்சர் ராதாகிருஷ்ணன்.பல்கலைக்கழகங்களின் வேந்தராக இருப்பவர் கவர்னர். ஒவ்வொரு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குவார். இந்த விழாக்களில், இணை வேந்தர்களாக இருக்கும் அமைச்சர்களும் பங்கேற்பது மரபு. ஆனால் தமிழக கவர்னர் ஆர்.என். ரவிக்கும், மாநில அரசுக்கும் ஏழாம் பொருத்தம் என்பது அரசியலை உற்றுநோக்கும் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இதனால் கவர்னர் செல்லும் பட்டமளிப்பு விழாக்களை அமைச்சர்கள் புறக்கணித்து வருகின்றனர். லேட்டஸ்ட்டாக நாகையில் ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவிலும் இதே புறக்கணிப்பு அரங்கேறி உள்ளது. இந்த விழாவில் கவர்னர் ரவி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தார். பல்கலைக்கழக இணைவேந்தரும், மீன்வளத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் நிகழ்வில் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளார்.பட்டமளிப்பு விழாவில் அழைப்பிதழில் பெயர் இல்லை என்பதால் கலெக்டரும் நிகழ்வில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

சாண்டில்யன்
செப் 18, 2024 20:04

வழக்கமா பட்டமளிப்பு விழாக்களுக்கு ஆளுநர் வலியுறுத்தும் ஆளுநருக்கு பிரியமான NCERT டில்லி தோஸ்த் வந்தர்களான்னு சொல்லவேயில்லையே


அப்பாசாமி
செப் 18, 2024 15:34

ஆல் இன் ஆல் அழகுராஜா பேர் மட்டும் இருந்தால் போதும்.


Ramesh Sundram
செப் 18, 2024 15:14

கரை வேட்டி காட்டாத கலெக்டர் ஆக இருப்பார்


M S RAGHUNATHAN
செப் 18, 2024 15:09

It is a pity that both top bureaucrats of the district who are direct recruit civil services officers have ignored the visit of Governor.The Union Home minister should take appropriate steps in this regard, if these officials have given a miss to the Governors visit.


M S RAGHUNATHAN
செப் 18, 2024 15:05

If the Collector and SP have avoided or boycotted the visit of Governor, it is a serious lapse of protocol. The administrative officials should not be biased and act against the established procedures. These officials are digging their own graves


RAMAKRISHNAN NATESAN
செப் 18, 2024 14:52

திமுக சின்னத்தனம் செய்யும் அருவருப்பான கட்சி ..........


sankar
செப் 18, 2024 12:50

கலெக்டர்கள் இந்திய ஆட்சியல் பணியில் இருப்பவர்கள் - தமிழக ஆட்சியால் பணியில் அல்ல என்பதை யாரவது அவர்களுக்கு நினைவு படுத்துங்கள் - அவர்கள் அரசியல் செய்வது சரியல்ல - கோர்ட்டுகள் கவனிக்கவும்


கல்யாணராமன்
செப் 18, 2024 12:30

தமிழக ஆளுநராக கிரண்பேடியை நியமிக்க வேண்டும்.


RAMAKRISHNAN NATESAN
செப் 18, 2024 14:51

அவர் வேஸ்ட் ......


pv முத்தூர்
செப் 18, 2024 11:48

அழைப்பிதழில் பெயர் விடுபட்டதே தவிர, கவர்னர் வருகை குறித்து கலெக்டருக்கு தெரியவில்லையா? அரசியல்வாதிகள் தவிர்க்கலாம் ஆனால் மக்கள் சேவையில் இருக்கும் அதிகாரிகளால் அதை செய்ய கூடாது. போலீஸ் பாதுகாப்புக்கு வந்ததா?